தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, […]

சார்பதிவாளர் அலுவலகங்கள் வீடியோ காட்சிகளுடன் சேர்த்து குரல் பதிவுகளையும் கண்காணிக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது பதிவுத்துறையில் 585 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் சொத்து ஆவண பதிவு, திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களும் வழங்கப்பட்டு ஆவணப்பதிவுகள் நடக்கின்றன. விசேஷ நாட்களில் கூடுதலாகவே டோக்கன் வழங்கப்படுகின்றன.. […]

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் ராணுவத்தின் வலிமை பாதுகாப்பு உத்தி உள்ளிட்டவைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) உருவாக்கி வருகிறது என செய்தி நிறுவனமான PTI தெரிவித்துள்ளது. இந்த பாடத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும். ஒன்று 3ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மற்றொன்று 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் […]

குஜராத்- வடக்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: குஜராத்- வடக்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் […]

ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் சமீபத்தில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து ஏழு மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு குறியீட்டின்படி, […]

தமிழகத்தில் கோயில், மசூதி, தேவாலயம் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத வழிபாட்டு தலங்களின் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே தகவல் பரப்பப்படுகிறது. இது வதந்தி. தமிழகத்தில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் ‘பொது வழிபாட்டு தலங்கள்’ என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் செய்யப்படுகிறது […]

இப்போதெல்லாம் சந்தையில் போலி உருளைக்கிழங்குகளும் விற்கப்படுகின்றன. புதிய உருளைக்கிழங்கைத் தேடி நீங்களும் போலி உருளைக்கிழங்கை வாங்குகிறீர்களா? உருளைக்கிழங்கு வாங்கும் போது, உருளைக்கிழங்கு உண்மையானதா அல்லது போலியானதா, ரசாயனக் கலவையா என்பதைக் கண்டறிய இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும். இப்போதெல்லாம் மக்கள் சில ரூபாய்களை மிச்சப்படுத்தும் நோக்கில் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளில், கலப்படப் பொருட்களின் விற்பனை வேகமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் உணவுப் […]

பெங்களூருவின் மகடி சாலையில் உள்ள மச்சோஹள்ளி கேட் அருகே ஒரு நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இரவு அங்கிருந்த பிரபல நகைக் கடையில் நடந்தது. நகைக் கடை மூடும் போது வந்த கும்பல், துப்பாக்கிகள் மற்றும் மூன்று பேருடன் கடைக்குள் நுழைந்தது. மேஜையில் இருந்த தங்கத்தைத் திருடிவிட்டு தப்பிச் சென்றது. தங்களை நோக்கி கூச்சலிட்ட ஊழியர்களைத் தள்ளிவிட்டு தங்கத்தைக் […]