2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதல்முறையாக அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது அடுத்த கட்ட திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படத் தொடங்கியுள்ளது. ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பை முடித்துவிட்ட விஜய், தற்போது முழுநேர அரசியலுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் உறுதியாகின்றன. இந்நிலையில், வருகிற ஜூலை 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை பனையூரில் உள்ள தலைமை செயலகத்தில் […]

700க்கும் மேற்பட்ட கிளைகளில் சுமார் 8.5 லட்சம் போலி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன என்பது சிபிஐ சோதனையில் தெரியவந்துள்ளது. சைபர் மோசடி மற்றும் ‘டிஜிட்டல் கைது’ வழக்குகளை தடுக்கும் வகையில் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 42 இடங்களில் ஆபரேஷன் சக்ரா-5 என்ற பெயரின் சிபிஐ சோதனை மேற்கொண்டது. போலி வங்கிக் கணக்குகள் மூலம் மக்களை ஏமாற்றிய குற்றவாளிகளின் மறைவிடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. […]

மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சுந்தர்.சி. பிறகு முறைமாமன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். பின்னர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவரது திரைப்படங்கள் காமெடி கலந்த திரைக்கதையாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அவரது இயக்கத்தில் கடைசியாக கேங்கர்ஸ் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்துக்கு முன்னதாக அவர் இயக்கத்தில் வெளியான மதகஜராஜா, அரண்மனை 4 ஆகிய இரண்டு படங்களுமே ஹிட்டடித்தன. எனவே சுந்தருக்கு கேங்கர்ஸ் ஹாட்ரிக் […]

இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வேகமாக வளர்ந்து வருகிறது. இது நுகர்வோருக்கு மிகுந்த வசதியை வழங்கும் அதே வேளையில், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் ஷாப்பிங்கிற்காக டிஜிட்டல் தளங்களை நோக்கித் திரும்புவதால், சைபர் குற்றவாளிகள் அவர்களை குறிவைத்து புதிய மோசடிகளைச் செய்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகம் தனது ‘சைபர் தோஸ்த்’ விழிப்புணர்வு திட்டத்தின் மூலம் ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. போலி வலைத்தளங்கள், ஃபிஷிங் செய்திகள் […]

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பிடெக் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த […]

143 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில், பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு குழந்தையின் அடையாளம், குடியுரிமை, கல்வி மற்றும் அரசு சேவைகள் போன்றவற்றிற்கான முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் (RGI) ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார். ஜூன் 12, 2025 தேதியிட்ட ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தில், RGI அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி: “புதிய குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்யும் நடவடிக்கையை மருத்துவமனையில் இருந்தபடியே முடிக்க, […]

நாடு முழுவதும் இரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் பொது மக்கள் அதிகமாக ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். நெடுந்தூரத்தையும் குறைந்த நேரத்தில் கடந்துவிடுவதோடு, பேருந்து கட்டணத்தை விட மிக மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதுதான் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. மேலும், ரயில்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. இந்த […]