ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம், அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், அங்குள்ள பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 38). இருவரும் பவானி காவல் நிலைய குடியிருப்புக்கு எதிரே உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு 16 வயது மகளும், 11 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம், நாகராஜ் […]

பின்தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட அல்லது தடை உத்தரவுகளைப் பெற்ற பெண்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 41% அதிகரிக்கிறது என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. “சர்குலேஷன்” இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, பின்தொடர்வது பெண்களின் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கக்கூடும், மேலும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். பின் தொடர்தல் என்பது மனிதர்களுக்கு இடையிலான வன்முறையின் (interpersonal violence) மிகவும் […]

எம்எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி நாளை மாலை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக உயர்கல்வித் […]

நம் அன்றாட உணவில் மீன் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இது வெறும் சுவைக்காக மட்டுமல்ல, உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது. மூளை நன்றாக வேலை செய்ய, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, நரம்புகள் சரியாக செயல்பட, மீன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மீனில் உள்ள ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மன அழுத்தம் […]

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். எனவே ரஷிய அதிபர் புதினை கடந்த 15-ந்தேதி சந்தித்து இது குறித்து பேசினார். அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் டிரம்ப்-புதின் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் […]

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது. அரசியல் கட்சியினரும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். திமுக கூட்டணி பலத்தோடு தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றன. நாம் தமிழர் கட்சி எப்போதும் போல் தனித்தே போட்டியிடும் என சீமான் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், தமிழக அரசியலில் புது என்ட்ரி கொடுத்துள்ள விஜய், தனது தவெகவுடன் முதல் தேர்தலை சந்திக்கிறார். கடந்தாண்டு தான் விஜய் […]

சூடானில் 2023ம் ஆண்டு தொடங்கிய இராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான சண்டை, வடகிழக்கு ஆப்பிரிக்க நாட்டை நாசமாக்கியது, சுமார் 14 மில்லியன் மக்களை அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற்றியது, மேலும் அதன் சில பகுதிகளை பஞ்சத்தில் தள்ளியது. இதனால் இன்றுவரை சூடானின் போர் பஞ்சம் மற்றும் நோயாக மாறியுள்ளது, மில்லியன் கணக்கான மக்கள் பசி, காலரா தொற்றால் சிக்கித் தவிக்கின்றனர். இதனால், சூடான் நாட்டில் சுத்தமான […]