போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வெளியாகிறது. போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.. இதை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீகாந்திற்கு ஜூலை 7-ம் தேதி வரை […]

பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் சமூக ஊடக கணக்குகள் மீது இந்தியாவில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது பாகிஸ்தான் சமூக ஊடக கணக்குகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படது. பாகிஸ்தானில் இருந்து வரும் ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் தள உள்ளடக்கங்களை நிறுத்துமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில் ஜூலை 2 ஆம் தேதி தடை […]

நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனக் கூறி மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவப் படிப்பிற்கான இளநிலை நீட் தேர்வு 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் […]

பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுமி மூன்று நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகலாத் மேகர் (41) என்பவர், தன்னை ஒரு தாந்திரீகர் எனக் கூறிக் கொண்டு அப்பகுதியில் வலம் வந்துள்ளார். துஷ்ட சக்திகளை அகற்றும் பூஜைகள், கடன் தொல்லைகள் நீங்கும் என நம்பிக்கை ஏற்படுத்தி பொதுமக்களில் புகழ் பெற்று வந்த இவர், தற்போது போலி சாமியார் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். போலீசார் […]

டெல்லியில் இருந்து வாஷிங்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பராமரிப்பு சிக்கல் கண்டறியப்பட்டதால் விமானம் பாதியிலேயே தரையிறங்கியது. ஜூலை 2 ஆம் தேதி, டெல்லியில் இருந்து வாஷிங்டன், டிசிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திட்டமிடப்பட்ட எரிபொருள் நிறுத்தத்தின் போது பராமரிப்பு சிக்கல் கண்டறியப்பட்டதால், ஆஸ்திரியாவின் வியன்னாவில் பாதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அட்டவணைப்படி இயங்கி வந்த AI103 விமானம், வியன்னாவில் திட்டமிட்ட எரிபொருள் நிரப்பும் நிறுத்தத்தை மேற்கொண்டது. […]