கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்ட 51 அரசு மருத்துவர்கள் பணிக்கு ஒழுங்காக வராத காரணத்தினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் வீனா ஜார்ஜ் புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசின் மருத்துவ கல்வித்துறையின் கீழ் ஏராளமான மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பல மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 51 […]

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச்மாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே மாதம் வெளியாகின. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித் […]

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் […]

இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் (ஆகஸ்ட் 7) அமல்படுத்தப்படவுள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள தாக்கம் குறித்து பெரும் கவலைகளை எழுப்பியது. இருப்பினும், தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. PHD வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (PHDCCI) நடத்திய ஆய்வின்படி, இந்த வரி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.19% […]

கரூர் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் பொன் அழகிரி உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். கரூர் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் பொன் அழகிரி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி தமிழ் செல்வன் உள்ளிட்ட 50 பேர் திமுகவில் இணைந்தனர். நேற்று இரவு, ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் இந்த இணைப்பு நடைபெற்றது. கரூரில் […]

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பதட்டங்கள் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள 25% வரிக்கு மேல் கூடுதலாக 25% வரியை அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை இறக்குமதி வரியை 50% ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்திய சந்தையில் நுழையும் அமெரிக்க பொருட்களின் விலைகளில் கூர்மையான அதிகரிப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் இறக்குமதிகள்: COMTRADE தரவுத்தளத்தின்படி, […]

இம்மாதத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் தொடர்ச்சியாக விடுமுறை. இம்மாதத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையாகும். அதேபோல், அதற்கு அடுத்து ஆகஸ்ட் 16 சனிக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. இதனால், சொந்த ஊருக்கு செல்ல […]