அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கும் வகையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்கிய இந்த தாக்குதல்கள், 6-வது நாளாக இன்று புதன்கிழமையிலும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துணைநிற்காமல், தாக்குதல்களை பரஸ்பரமாக நடத்தி […]
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனைங்களை திரும்ப ஒப்படைக்க தயார் என்று அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது. 3 நாட்கள் நடந்த இந்த சோதனையில் ரூ.1000 கோடி […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி குடமுழுக்கு விழா, ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “ கேரள பாரம்பரிய முறைப்படி திருச்செந்தூர் முருகன் பூஜை செய்யப்படுகிறது. எனவே தற்போது நடைபெறும் […]
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகிய்ள்ளது. இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. வயது வரம்பு: இப்பதவிகளுக்கான வயது வரம்பு தகவல் அறிவிப்பில் இடம்பெறவில்லை. பதவி மற்றும் கல்வித்தகுதி * மருத்துவ அதிகாரி பதவிக்கு எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். * மருத்துவ அதிகாரி ( […]
பாகிஸ்தானில் உள்ள ஜகோபாபாத் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு காரணமாக அந்த வழியாக சென்ற ஜாஃபர் ரயில் தடம் புரண்டது. இந்த சம்பவம் பலுசிஸ்தான் வழியாக ரயில் பயணத்தின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியது. பெஷாவரில் இருந்து குவெட்டாவுக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு காரணமாக தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இந்த வெடிப்பு மூன்று அடி அகலமான பள்ளத்தை உருவாக்கி, கிட்டத்தட்ட 6 அடி ரயில் பாதையை அழித்ததாக […]
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் வைப்பு நிதி (PF) கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஈபிஎஃப்ஒ (EPFO) எனும் மத்திய அரசு அமைப்பு ஏற்றுள்ளது. ஒவ்வொரு ஊழியருக்கும் தனித்தனியாக UAN (Universal Account Number) வழங்கப்படுவது வழக்கம். இந்த UAN எண்ணின் கீழ் தான் PF பணம் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது. பொதுவாக, ஊழியர்கள் ஓய்வு வாழ்க்கைக்காக PF தொகையை சேமிக்கின்றனர். ஆனால் திருமணம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட […]
பாமக தலைவர்கள் இருவர் நெஞ்சுவாலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் இன்று காலம் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இதை தொடர்ந்து பாமக கௌரவ தலைவர் தலைவர் ஜி.கே மணி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். சேலம், தருமபுரியில் நடைபெறும் பாமக பொதுக்குழு […]
இப்போதெல்லாம், உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதை பலர் உணர்ந்து வருகிறார்கள். அதனால்தான் காலையில் எழுந்தவுடன் நடைபயிற்சி அல்லது ஜாகிங் செய்ய விரும்புகிறார்கள். முடிந்தால், மாலையிலும் நடைபயிற்சி செய்கிறார்கள். ஆனால் நடைபயிற்சி செய்த உடனேயே குளிக்கலாமா? இல்லையா? இது பலருக்கு இருக்கும் ஒரு சந்தேகம். இதைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம். வெயிலில் நடந்து சென்று வீடு திரும்பிய பிறகு, தோல் சூடாகிறது. இந்த நிலையில், நடைப்பயணத்தை […]
எஜமான் திரைப்படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியானது. ஆர்.வி.உதயகுமார் இயக்கியிருந்த அந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இந்த படத்தில் வில்லனாக நெப்போலியன் நடித்திருக்கிறார். இந்த நிலையில் ரஜினி குறித்து நெப்போலியன் அளித்த பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், “எஜமான் பட சமயத்தில் எல்லாம் நான் வளர்ந்துவரும் நடிகராக இருந்தேன். அந்தப் படத்தில் என்னை […]
கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படம் இன்று கர்நாடகாவில் வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில், போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான படம் தக்லைஃப். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, ”தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது” என்று கமல்ஹாசன் கூறிய கருத்து, கர்நாடகாவில் கடும் சர்ச்சையை கிளப்பியது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் படத்தை வெளியிட முடியும் என்று […]

