ஹேர் கலரிங் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஹேர் கலரிங் செய்துகொள்கிறார்கள். சிலருக்கு ஹேர் கலரிங் செய்துகொள்ள ஆசை இருந்தாலும் அதனால் தலைமுடிக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்ற குழப்பங்கள் இருக்கின்றன. ஆம், நீங்கள் பயன்படுத்தும் ஹேர் டை உங்கள் உச்சந்தலையை ரகசியமாக சேதப்படுத்தும் ஆபத்து அதிகமாக உள்ளது. இது உங்கள் தலை ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கும். பொதுவாக விற்பனை செய்யப்படும் ஹேர் கலர்கள் […]
திரைப்படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனத்தை தடை செய்யக்கோரிய வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. புதிதாக வெளியாகும் திரைப்படங்களை, ரிலீசான நாளிலேயே சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனம் செய்து வீடியோ போடுவது தற்போது வழக்கமாகிவிட்டது. இந்த விமர்சனங்கள், ரசிகர்களை திரையரங்குக்கு வரமுடியாமல் தடுக்கின்றன எனவும், இதில் சிலர் பணம் வாங்கி நல்ல விமர்சனம் செய்கிறார்கள்; சிலர் பணம் தரவில்லையென பொய்யான விமர்சனம் செய்கிறார்கள் எனவும் தயாரிப்பாளர்கள் புகார் […]
சமூக ஊடகங்களில் “கூமாபட்டிக்கு வாங்க” என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்படும் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள், தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. பசுமை மலைக்குன்றுகள், குற்றால வனவாசலின் அருகில் உள்ள மெல்லிய பச்சை தரைகள், பனித்துளிகள் நிறைந்த இயற்கைக் காட்சிகள் இளம் பயணிகளையும் சமூக ஊடக ஆளுமைகளையும் வெகுவாக ஈர்த்துள்ளன. ஆனால், இந்த இடங்கள் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்பதால், பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதியில்லை […]
மேகாலயாவிற்கு தேனிலவுக்கு சென்ற ராஜா ரகுவன்ஷி என்பவரை அவரது மனைவி சோனம் கொலை செய்த சம்பவத்தை போன்று தெலுங்கானாவிலும் மற்றொரு பயங்கர திட்டமிட்ட கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமணமாகி ஒரே மாதத்தில் தேதேஸ்வர் என்ற இளைஞரை அவரது மனைவி ஐஸ்வர்யா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பின்னணி குறித்து பார்க்கலாம். தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜஸ்வர் (வயது 32) தனியார் […]
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜூலை முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய வரி விகித மாற்றங்கள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 12% ஜிஎஸ்டி வரி அடுக்கை நீக்குவது அல்லது குறைப்பது தொடர்பான விவாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி, வருமான வரி மற்றும் சுங்கத் துறைகளின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். […]
விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் நலன் கருதி அவர்களது வருவாய் பெருக்கும் விதமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையத்தளம் உருவாக்கப்படும். இந்த இணையத்தளம் மூலம் கால்நடைகளில் சந்தை விலை நிலவரம் பல்வேறு சந்தைகளில் இருப்பு நிலவரம். உள்ளிட்டவை கால்நடை விவசாயிகளால் […]
பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2800-க்கும் அதிகமான கட்சிகள் உள்ளன. இவற்றில் பல இந்த நிலையை தொடர்வதற்கு தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்பது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து இத்தகைய அரசியல் கட்சிகளை அடையாளம் காண நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை 345 […]
தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) பகுப்பாய்வின்படி, கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்திய இளைஞர்களிடையே தற்கொலை தான் இறப்புக்கான இரண்டாவது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 2020–2022 காலக்கட்டத்தில் மட்டும் தற்கொலைகள் 17.1% இளம் மரணங்களுக்குக் காரணமாக இருக்கின்றன. இதில் சாலை விபத்துகள் முதல் இடத்தையும் தக்கவைத்துள்ளன. ஆனால், நாட்டின் மொத்த இறப்புகளில் தற்கொலை விகிதம் வெறும் 5% மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகளவில், இளைஞர்களின் மரணத்திற்கு மூன்றாவது பொதுவான […]
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகரில் உள்ள பாங்குயில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 29 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 25ம் தேதி பாங்கி நகரத்தில் உள்ள பார்த்தேலமி போகண்டா (Barthelemy Boganda) உயர்நிலைப்பள்ளியில், 5,300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளங்கலைப் பட்டப்படிப்புத் தேர்வை எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது, […]
நியாயவிலைக்கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் அவர்களை தமிழக அரசு ஏமாற்றி வருகிறது. தமிழ்நாட்டு மக்களில் ஒரு தரப்பினரின் வாக்குகளை வாங்குவதற்காக வாக்குறுதிகளை அளித்து விட்டு, வெற்றி பெற்ற பிறகு […]

