கடந்த வாரம் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 400 க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், நேற்றைய தாக்குதலில் மட்டும் 3 மூத்த தளபதில் பலியானதாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தொடர்ந்து 9 நாட்களாக நடந்து வருகிறது. சனிக்கிழமை (ஜூன் 21, 2025) இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தினர். இதற்கிடையில், அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக ஐரோப்பிய இராஜதந்திரிகள் […]

வாக்குச் சாவடி காட்சிகளைப் பொதுவில் வெளியிடுவது வாக்காளரின் தனியுரிமையை மீறும் செயல் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடி காட்சிகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. வாக்குச்சாவடி வீடியோ காட்சிகளை பகிர்வது வாக்காளர் தனியுரிமையை மீறும் மற்றும் ஜனநாயக செயல்முறைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று உறுதியாகக் கூறியுள்ளது. காட்சிகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதாகத் தோன்றினாலும், அவை […]

3-ம் உலகப் போர் வெடித்தால், பாதுகாப்பான புகலிடங்களாக கருதப்படும் நாடுகள் குறித்து பார்க்கலாம். உலகில் தற்போது இரண்டு பெரிய போர்கள் நடந்து வருகின்றன.. ஒன்று ரஷ்யா-உக்ரைன் போர்.. மற்றொன்று இஸ்ரேல்-ஈரான் போர்.. இவை இரண்டும் 3 ஆம் உலகப் போரைத் தூண்டக்கூடிய ஒரு பரந்த மோதலாக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது முழு உலகத்தையும் ஒரு பேரழிவுகரமான போரில் மூழ்கடிக்கும். ஆனால் ஒரு உலகப் போர் வெடித்தால் உலகில் […]

வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல் நலக்குறைவு காரணமாக 2 நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 2 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் […]

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி, கனிமவள அமைச்சராக இருந்தவர் பொன்முடி.. அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக செம்மண் வெட்டி எடுத்ததில் அரசுக்கு சுமார் ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து செம்மண் முறைகேடு மூலம் பெற்ற தொகையை வெளிநாடுகளில் […]

ChatGPTயிடம் நீங்கள் ஒருபோதும் கேட்க கூடாத ஐந்து விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.. ChatGPT என்பது அனைவரின் விருப்பமான மெய்நிகர் நண்பராக மாறிவிட்டது, அலுவலக மின்னஞ்சல்களுக்கு உதவுவது முதல் இரவு உணவிற்கு என்ன சமைக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது வரை, எல்லாவற்றையும் ChatGPT செய்கிறது. ஆனால் ChatGPT புத்திசாலித்தனமாகத் தோன்றுவதால் சில விஷயங்களைச் செய்ய அது அனுமதிக்கப்படுகிறது (அல்லது முடியும்) என்று அர்த்தமல்ல. உண்மையில், நீங்கள் என்ன செய்யக் கேட்கக்கூடாது என்பது […]