பாரம்பரிய உணவுகள் குறைந்து, பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகரித்ததால்தான் இன்று புற்றுநோய் போன்ற மோசமான நோய்கள் அதிகரிக்கின்றன என சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC – International Agency for Research on Cancer) வலியுறுத்தியுள்ளது. மனிதர்கள் தங்கள் உணவுப் பழக்கங்களில் கவனமில்லாமல் செயல்படுவதால், புற்றுநோயின் அபாயம் அதிகரித்துள்ளது. புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சில உணவுப் பொருட்களின் பட்டியல் இதோ: மைக்ரோவேவ் பாப்கார்ன்: மைக்ரோவேவ் பாப்கார்னில் ‘பெர்ஃப்ளூரெக்டனிக்’ என்ற அமிலத்துடன் இணைந்து […]
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 5 உணவுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.. மீதமுள்ள உணவை வீணாக்கக் கூடாது என்பதற்காக நம்மில் பலரும் அதனை மீண்டும் சூடாக்கி சாப்பிடுகிறோம்.. இருப்பினும், சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்துவது அவற்றை நச்சுத்தன்மையடையச் செய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா.. மீண்டும் சூடுபடுத்துவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்களை உருவாக்க வழிவகுக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் விழிப்புடன் இருப்பதும், எந்த […]
இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு, அமெரிக்காவைப் போலவே இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், “சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் செலவினங்களை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு ஏற்கனவே மாறிவிட்டதாகவும், நீங்கள் இப்போது பார்ப்பது வெறும் ட்ரெய்லர்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய […]
முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிட நியமனம் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த […]
இந்தியாவில் 163 பேருக்கு XFG என்ற புதிய வகை கோவிட் பாதிப்புகள் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த மாறுபாடு மிகவும் ஆபத்தானதா ?இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தற்போது கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 6500ஐ நெருங்கி உள்ளது. இதில் இந்தியாவில் XFG என்ற புதிய வகை கொரோனாவின் 163 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று இந்திய SARS-CoV-2 […]
தும்மலை நிறுத்துவது உயிருக்கு ஆபத்தானது. நாம் தும்மும்போது, காற்று நம் நாசித் துவாரங்கள் வழியாக மிக வேகமாகச் செல்கிறது. தும்மலை ஒரு கணம் நிறுத்தினாலும், அதன் அழுத்தம் அனைத்தும் மற்ற உறுப்புகளை நோக்கித் திருப்பி விடப்படுகிறது. தும்மலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். தூசி, காரமான உணவு, சளி, ஒவ்வாமை, உடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை. தும்மலின் உதவியுடன், மூக்கு உடலை சுத்தம் செய்கிறது. இது ஒரு வகையான ஒவ்வாமை […]
கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸ் வெளியானது. அவர் தொடர்ந்து நடிப்பதற்கு சூர்யா சப்போர்ட்டாக இருக்கிறார். இந்தச் சூழலில் சூர்யா […]
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும் உணவுமுறை மாற்றங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை பிரபல மருத்துவர் பகிர்ந்து கொண்டார். நமது உடலில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கழிவுகள், கூடுதல் திரவம் மற்றும் செல்களால் உற்பத்தி செய்யப்படும் அமிலத்தை நீக்குதல், நீர், உப்புகள் மற்றும் நமது இரத்தத்தில் உள்ள சோடியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களின் ஆரோக்கியமான சமநிலையை பராமரித்தல் ஆகியவை அடங்கும். எனவே, சிறுநீரக செயல்பாட்டை […]
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனின் மனு ஏற்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் திமுகவில் வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரும் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, காலியாகும் இந்த 6 இடங்களுக்கும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலுக்கான […]
நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது. இந்நிலையில், வேல்முருகன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 3 ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். […]

