பாலியல் இன்பத்திற்காக தனது பிறப்புறுப்பில் (rectum) சொருகிய மாய்ஸ்சரைசர் (moisturiser) பாட்டிலை 2 நாட்களுக்கு பின் இளம்பெண்ணின் குடலில் இருந்து அறுவை சிகிச்சை இல்லாமலேயே மருத்துவர்கள் அகற்றினர். டெல்லியை சேர்ந்த 27 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த 2 நாட்களாக கடும் வயிற்று வலியால் மலம் கழிக்க முடியாமல் அவதியடைந்து வந்துள்ளார். இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் மருத்துவர்கள் விசாரித்துள்ளனர். அப்போது, பாலியல் இன்பத்திற்காக அந்தரங்க உறுப்பில் […]

திமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளதாக பேசிய முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு பதிலளித்த ராமதாஸ், அதில் பாமக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. எனவே, பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கும்போது கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி போராடிய சிஐடியு தோழர்களை விருதுநகர் எஸ்.பி. கண்ணன் […]

என்னை திருமணம் செய்துவிட்டு, ஒரே நாளில் நிகிதா ஓடிவிட்டார் என்று தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன்ஜி கூறினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி […]

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்திய நெடுஞ்சாலைகள் அமெரிக்க நெடுஞ்சாலைகளின் தரத்திற்கு இணையாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ஜார்க்கண்டின் ராஞ்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், சாலை உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார், உலகத்தரம் வாய்ந்த பொறியியல், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்தி இந்தியா நெடுஞ்சாலை கட்டுமானத்தில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருவதாகக் கூறினார். “லாஜிஸ்டிக் செலவும் டிசம்பர் […]

சேலம் மாவட்டத்தில் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொது மக்கள் இ-சேவை மையம் மற்றும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நத்தம் இணைவழி பட்டா மாறுதல் திட்டம் 04.03.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, […]

நீரிழிவு நோய் பொதுவாக பெரியவர்களைப் பாதிக்கும் ஒரு நிலை என்றாலும், அது குழந்தைகளிலும் ஏற்படலாம். உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் ஜங்க் ஃபுட் ஆகியவை அதிகரித்து வருவதால், குழந்தைகளிலும் நீரிழிவு நோய் வரத் தொடங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 14% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு நீண்டகால நிலையாகும். இதில் கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யவோ […]

வார இறுதிநாள் விடுமுறையை முன்னிட்டு, ஜூலை 4, 5 தேதிகளில் தமிழகம் முழுவதும் 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு செல்லவும் ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வார விடுமுறை நாட்களை முன்னிட்டு ஜூலை 4, 5, 6 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து […]

தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுவே, வருடத்தின் பாதி நாட்கள் நீருக்குள் மூழ்கி காட்சி தரும் அதிசய முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. “குறுக்குத்துறை முருகன் கோவில்” என அழைக்கப்படும் இத்தலம், திருச்செந்தூர் திருத்தலத்திற்கு நிகரான ஆன்மிகச் சிறப்பை பெற்றதாக பக்தர்கள் கருதுகின்றனர். பொதுவாக முருகன் கோவில்கள் மலை மேல் அமைந்திருக்கும் போது, திருச்செந்தூர் கோவில் மட்டும் கடற்கரையில் அமைந்துள்ளதென்பதும், குறுக்குத்துறை கோவில் மட்டும் ஆற்றின் நடுவே இருப்பதென்பதும் […]

ஈரான், உக்ரைன் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் வியாழக்கிழமை தொலைபேசியில் விவாதித்தனர். உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இராஜதந்திர நடவடிக்கைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை சுமார் ஒரு மணி நேரம் தொலைபேசியில் உரையாடினர். இதன் போது, ​​உக்ரைனில் ரஷ்யா […]

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ரிவர் நார்த் பகுதியில் புதன்கிழமை இரவு (3 ஜூன் 2025) ஒரு உணவகத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி , இந்த சம்பவம் ஒரு பாடகரின் ஆல்ப வெளியீட்டு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவகத்திற்கு வெளியே நடந்தது . […]