வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகியுள்ளார் என இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் தனது அறிக்கையில்; என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், […]
இந்தியன் ரயில்வேயில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வடகிழக்கு ரயில்வேயில் இருக்கின்ற காலி பணியிடங்களை ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் இந்த மாதம் இறுதி வரையில் வரவேற்கப்படுகின்றன. ஸ்போர்ட்ஸ் கோட்டா: ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் 2, 3,4,5 உள்ளிட்ட நிலைகளில் பணியிடங்களுக்கு ரூபாய் 5,200 , 20,200 உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஊதிய விகிதம் நிரப்பப்பட […]
டெல்லி பகுதியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாசு அளவு மோசமடைந்து வருவதால், டெல்லி பகுதியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இந்த நடவடிக்கையால் டெல்லியின் காற்றின் தரம் மேம்பட வாய்ப்புள்ளது. “தேசிய தலைநகரில் காற்றின் தரக்குறியீட்டு 400 என்ற கடுமையான பிரிவில் உள்ளது, தேசிய தலைநகரின் காற்றின் தரம் மேம்படும்” என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை அதிகாரி விஜய் […]
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து வழங்கும் ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத் துறையில் ஆர்வம் கொண்டு செய்தியாளராக, எழுத்தாளராக, கருத்தாளராக தடம் பதிக்க விரும்பும் இளம் தலைமுறைக்குப் பெரும் வாய்ப்பாக இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறையின் […]
கேரள மாநிலத்தைச் சார்ந்த சௌதாமினி என்பவர் கடந்த 2014 ஆம் வருடம் நவம்பர் மாதம் போர்ட் கிளாசிக் டீசல் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை 8,94,876 ரூபாய் என்று சொல்லப்படுகிறது. கைரலி போர்ட் என்ற ஷோரூமில் இந்த கார் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காரின் விற்பனையை அதிகப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்ட விளம்பரங்களில் ஒரு லிட்டருக்கு 32 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது இதனை நம்பித்தான் சௌதாமினி இந்த காரை […]
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தினையும், மின்கட்டண உயர்வினையும் வாபஸ் பெறாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டத்தை நடத்துவோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதிலிருந்து மின் கட்டண உயர்வுக்குத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆதார் இணைப்பு மூலம் எந்த விதமானப் பாதிப்பும் இல்லை என்று அரசு தெரிவித்தாலும், […]
சென்னை அம்பத்தூர் பகுதியில் ஒரு சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு, அரசுத்துறை ஆவணங்களை போலியாக தயார் செய்ததாகவும், நிலம் குறித்த ஆவணங்களை பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் வட்டாட்சியர் ராஜசேகர் புகார் வழங்கியுள்ளார். இந்த புகாரினடிப்படையில் அம்பத்தூர் ஒரகடம் வெங்கடேஸ்வரா நகரை சார்ந்த வின்சென்ட்(85), அம்பத்தூர் சோளம்மேடு பகுதியைச் சார்ந்த பினு(41) உள்ளிட்ட 2 பேரையும் போலி ஆவணங்களை தயார் செய்தபோது கையும், களவுமாக காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் […]
திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது; அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல். இது குறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு கிழ்கண்ட அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதன்படி […]
திருச்சி சிரஞ்சீவி நகர் ஏ ஆர் கே நகரைச் சார்ந்தவர் திரேந்தர்(42) இவர் மணிகண்டம் பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகின்றார். இந்த பகுதியில் இருக்கின்ற வேப்ப மரத்தில் உடல் முழுவதும் காயங்களுடன் கயிற்றால் கட்டப்பட்ட ஒரு இளைஞர் நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மணிகண்டன் காவல்துறை ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் காவல் துறையைச் சார்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சார்ந்த 45 வயதான தொழிலதிபர் கமல்காந்த் ஷா, இவர் சென்ற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக, மரணமடைந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அந்தேரியில் இருக்கின்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அந்தேரி மருத்துவமனையில் இருந்து மும்பை மருத்துவமனைக்கு சென்ற செப்டம்பர் மாதம் 3ம் தேதி திடீரென்று மாற்றப்பட்டார். அங்கே சிகிச்சை வழங்கப்பட்டு வந்த […]