தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை மறுநாள் (டிச.5) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது, மேலும் மேற்கு- […]
வகுப்பறையில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை மாணவர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மட்டுங்கா என்ற பகுதி உள்ளது. இங்கு BMC என்ற பள்ளி இயங்கி வரும் நிலையில், பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் நடன பயிற்சிக்கு சென்றுள்ளனர். அப்போது அதே வகுப்பில் படிக்கும் 13 […]
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 25% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 2022ஆம் ஆண்டுக்கான மாநில விருதுகளை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், “மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். சில நேரங்களில் உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இனி […]
பிக்பாஸ் அசீம் குறித்து நடிகை சுபத்ரா பேசிய கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே அடாவடியாகவும், அதிகாரத்தை செலுத்தும் போக்குடனும் நடந்து கொண்டு வருகிறார் அசீம். குறிப்பாக, பெண் போட்டியாளர்களை மட்டம் தட்டி பேசுவதும், ஆண் போட்டியாளர்களிடம் திமிராக தள்ளுமுள்ளு சண்டையிட்டு ஒடுக்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். இந்த வாரத்தில் கூட அமுதவாணனை கண்ணத்தில் அடித்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், நடிகை சுபத்ரா […]
ரஜினி நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘பாபா’ திரைப்படம் விரைவில் மறுவெளியீடு செய்யப்பட உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பாபா’. ரஜினிகாந்த் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ‘படையப்பா’ படம் வெளியாகி 3 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினி நடித்து வெளியான இந்த படம் பெரும் எதிர்ப்பார்ப்பை […]
திமுக அரசின் மிக முக்கிய வாக்குறுதியான உரிமைத் தொகை எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், 2023ஆம் ஆண்டில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, நீட் தேர்வு ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000, முதியோர் ஓய்வூதியம் ரூ.1500, கல்வித் துறை மீண்டும் […]
வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில்களில் பயணிக்க நேரடி பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளும் முறை, பயண அட்டை முறை, க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கும் முறை என 3 முறைகள் உள்ளன. இந்நிலையில், வாட்ஸ்-அப் மூலமாக […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் அசீம் – விக்ரமன் பஞ்சாயத்து இல்லாத நாட்களே கிடையாது என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற டாஸ்க்கில் அசீமை அட்டக்கத்தி என விக்ரமன் கூறியதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோலார், […]
தேசிய விருது வாங்கிய முதல் 5 தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். மலைக்கள்ளன்: 1954ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் மலைக்கள்ளன் படம் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்தது. இத்திரைப்படம் 6 மொழிகளில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். மறைந்த கருணாநிதி இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இப்படம் 90 லட்சம் ரூபாய் வரை வசூல் சாதனை படைத்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழில் முதல் ஜனாதிபதி பரிசு […]
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி ரத்தம் வழிய வழிய பொதுமக்கள் செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 3 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மாணவிகளை மிரட்டி இந்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் அரசு உதவிப்பெறும் மகளிர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் உயிரியல் ஆசிரியாக பணிபுரிபவர் ரமணா (47). […]