தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் உடல் நலக்குறைவால் காலமானார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் டேவிட் முர்ரே வெள்ளிக்கிழமை காலமானார் என்று கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (CWI) தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 72. முர்ரே வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் கிரேட் சர் எவர்டன் வீக்கஸின் மகன். முர்ரேயின் மகன் ரிக்கி ஹோய்ட், பார்படாஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை விக்கெட் கீப்பர் மற்றும் […]

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவரை கொன்று த்துண்டாக வெட்டிய சம்பவம் பங்களாதேஷில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் கவிதா ராணி என்ற இந்து பெண்ணை அவரது காதலன் அபுபக்கர் சித்திக் கொடூரமாக கொலை செய்த மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம் எல்லைக்கு அப்பால் இருந்து வெளிவந்துள்ளது. நவம்பர் 7, 2022 அன்று குற்றவாளிகள் உடலைத் தலையை துண்டித்து மூன்று துண்டுகளாக வெட்டி சாக்கடையில் வீசியதாகத் செய்தி வெளியாகி உள்ளது. […]

மின் இணைப்புடன் ஆதாரை எண்ணை இணைக்க அனைத்து மின் அலுவலகங்களிலும் வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது […]

பழைய 1 ரூபாய் மற்றும் 50 பைசா நாணயங்கள் அல்லது நோட்டுகளை வைத்திருந்தால் வங்கிகள் மூலமாக மாற்றிக் கொள்ளலாம். உங்களிடம் பழைய 1 ரூபாய் மற்றும் 50 உங்களிடம் இந்த பழைய நாணயம் இருந்தால் மாற்றிக் கொள்ளலாம் பைசா நாணயங்கள் அல்லது நோட்டுகளை வைத்திருந்தால், அந்த நாணயங்களை வங்கியில் டெபாசிட் செய்ய விரும்பினால், எந்த சிரமமும் இல்லாமல் வங்கியில் டெபாசிட் செய்யலாம். ஆனால் நீங்கள் பழைய நாணயங்களை டெபாசிட் செய்தவுடன், […]

டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழ் மொழி பயிலரங்கம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்களில்‌ ஆட்சிமொழித்திட்டச்‌ செயலாக்கம்‌ விரைவாகவும்‌, முழுமையாகவும்‌ நடைபெறத்‌ துணைபுரியும்‌ வகையில்‌ ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ ஆட்சிமொழிப்‌ பயிலரங்கம்‌ மற்றும்‌ கருத்தரங்கம்‌ தமிழ்‌ வளர்ச்சித்துறை சார்பாக நடத்த பெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ 2022-23ஆம்‌ ஆண்டிற்கு ஆட்சிமொழிப்‌ பயிலரங்கம்‌, கருத்தரங்கம்‌ 01.12.2022, 02.12.2022 ஆகிய இரண்டு நாள்கள்‌ தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி […]

ஆதாரை இணைப்பதினால் மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் மானியத்தில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது ஒன்றிய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. […]

பள்ளி மாணவர்களுக்கு மூன்று மாதம் குளிர்கால விடுமுறையை ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. மலைப்பகுதியில் பனிப்பொழிவு நிலவி வருவதால், ஜம்மு காஷ்மீர் அரசு, குளிர்காலம் தொடங்குவதைக் கருத்தில் கொண்டு பள்ளத்தாக்கில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று மாத குளிர்கால விடுமுறையை அறிவித்தது. ஆரம்ப நிலை முதல் (நர்சரி முதல் 5ம் வகுப்பு வரை) வகுப்புகள் டிசம்பர் 1ம் தேதி முதல், 6 முதல் 8ம் வகுப்பு வரை டிசம்பர் 12ம் தேதி […]

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. தலைநகரம், மருதமலை என எவர்க்ரீன் காமெடிகளை தந்த சுராஜ் படத்தை இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி ஆனந்தராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அப்பத்தா பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அந்தப் பாடலுக்கு பிரபுதேவா கோரியோக்ராஃபி செய்திருந்தார். வடிவேலு […]

பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளது தற்போது பெரிய சர்ச்சையாக கிளம்பியுள்ளது. வெள்ளிக்கிழமை தானேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், பெண்களின் ஆடைகள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததோடு, பெண்கள் ஆடை இல்லாமல் அழகாக இருப்பார்கள் என்றார். இந்த நிகழ்வில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸும் கலந்து கொண்டார், இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி […]