தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழ்நாடு கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. […]
பவர் ரேஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஜேசன் டேவிட் உடல் நலக்குறைவால் காலமானார். பவர் ரேஞ்சர்ஸ் படத்தில் டாமி ஆலிவராக நடித்து மிகவும் பிரபலமான ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார். அவருக்கு வயது 49. நடிகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இறப்புக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. 1993 முதல் 1996 வரை இயங்கிய மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸில் படத்தில் நடித்ததை […]
தமிழக அரசு சார்பில் வரும் 25ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துக்கொள்ளும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து […]
சொத்துவரினை தனிவட்டி இல்லாமல் செலுத்த மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் ஆக்டோபர் 1-ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. தாமதமாக சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும். எனினும் சொத்துவரி […]
வேப்ப எண்ணெய்யில் ஆன்டி ஆக்சிடன்ட் சத்துகள் அதிகம் இருக்கின்றன. வேப்ப எண்ணெய்யை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும். வேப்ப எண்ணெய்யில் மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்கள் உள்ளன. வேப்ப எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபாயம் குறைவு. அனைத்து விதமான சுவாசப் பிரச்சனைகளையும் நீக்கும் தன்மை வேப்ப […]
கடந்த அக்டோபர் 30ம் தேதி நடந்த மோர்பி பாலம் அறுந்து விழுந்து 135 பேர் பலியான சம்பவத்தில் அந்த நாளில் 3,165 டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்பனையானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்துவிழுந்தது. சாத் பூஜை மற்றும் விடுமுறையை ஒட்டி கடந்த அக்டோபர் 30ல் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கான […]
கார்த்திகை அமாவாசையன்று விரதம் இருந்து வழிபாடு நடத்தினால் குழந்தை பாக்கியம் பெறலாம் என்று முன்னோர்கள் சாஸ்திரத்தில் கூறியுள்ளனர். கார்த்திகை மாதம் முழுவதுமே சிவன், முருகன், ஐயப்பன் கோயில்களில் கோலாகலமான வழிபாடு இருக்கும். அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமி நாள் எந்தஅளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு கார்த்திகை அமாவாசைக்கும் முக்கியத்தும் அளிக்கப்படுகின்றது. இந்த மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பாற்கடலில் லட்சுமி தேவி அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. நாளை […]
மகளிர் உதவி மையம் ’181’ திட்டம் பற்றிய விழிப்புணர்வு 25ம் தேதி தொடங்குகின்றது. 181 மகளிர் உதவி மையம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 25ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் 181 மகளிர் உதவி மையத்தின் திட்டத் தலைவர் ஷ்ரின் பாஸ்கோ, டிஜிட்டல் மீடியா நிபுணர் கிஷோர் தேவா மற்றும் டிஜிட்டல் மீடியா […]
பா.ஜ.க. தமிழகத்தின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற கங்கணம் கட்டிக்கொண்டார் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம் அழைக்கப்படவில்லை. இதனால் உள்கட்சி மோதல் வெடித்தது. நேற்று காயத்ரி ரகுராம் டுவிட்டர் பதிவுகளை அடுக்கடுக்காக அடுக்கினார். இதில் சிலவற்றை உளறிக்கொட்டினார். இந்நிலையில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து […]
டெல்லியில் காதலனால் கொல்லப்பட்டு 35 கூறுகளாக்கி வனப்பகுதியில் உடல்பாகங்களை வீசிய நிலையில் போலீசார் மண்டை ஓடு ஒன்றை மீட்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்தவர் அப்தாப்-ஷ்ரத்தா இருவரும் டேட்டிங் செயலியில் சந்தித்து பேசி, பழகி பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இவர்களின் காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால் பெற்றோரை எதிர்த்து இமாச்சல் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றுவிட்டு இறுதியாக டெல்லிக்கு வந்துள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே […]