நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் ; நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் 4.86 லட்சம் 5ஜி அலைக்கற்றை பரிமாற்ற நிலையங்களை தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் […]

ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது இதய நோய், நீரிழிவு நோய், டிமென்ஷியா அல்லது மனச்சோர்வு காரணமாக ஏற்படும் ஆரம்பகால மரண அபாயத்தைக் குறைக்கும் என்று ஒரு புதிய உலகளாவிய ஆய்வு காட்டுகிறது. பல ஆண்டுகளாக, ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு பெரிய புதிய ஆய்வு, இதய நோய் […]

நம் அன்றாட வேலைகளில் தினசரி முக்கியமான ஒன்றில் பல் துலக்குதலும் முக்கியமானதாகும். நம் காலை கடமைகளில் ஒன்றான இதை நாம் அவசர அவசரமாக செய்வதால் சிலவற்றை கவனித்திருக்கமாட்டோம். முன்பெல்லாம் பல் துலக்குவதற்கு வேப்பிலை குச்சியை பயன்படுத்தினார்கள். பின்பு பல்பொடி பயன்படுத்தினார்கள். தற்போது நவீனமயமானதையடுத்து பிரஷ், பேஸ்ட் உபயோகப்படுத்தி வருகிறார்கள். காலையில் வேகவேகமாக பல் துலக்கிவிட்டு சென்றுவிடுவோம். எத்தனை பேர் பேஸ்டில் கீழ் பகுதியில் இருக்கும் நிறத்தை கவனித்தார்கள் என்று தெரியாது. […]

இந்தியாவில் திகிலூட்டும், மர்ம இடங்கள் பல உள்ளன.. அந்த வகையில் இந்தியாவின் மிகவும் பயமுறுத்தும் இடம் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.. பல அமானுஷய் அமானுஷ்ய கதைகளால் நிரம்பிய ஒரு பாழடைந்த பங்களா தான் இது. சிலர் இதனை பேய் பங்களா என்றும், பிற இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இங்கு இருப்பதாகவும் கூறுகின்றனர். சேதமடைந்த சுவர்கள், உடைந்த ஜன்னல்கள் மற்றும் அதிகமாக வளர்ந்த தாவரங்கள் என இந்த பங்களா பார்ப்பதற்கே […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள TNPSC GROUP II & IIA முதல்நிலை தேர்வுக்கு நாமக்கல் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப் […]

ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலம் வந்தவுடன், கொசுக்களின் அச்சுறுத்தல் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும், கொசுக்களால் பரவும் நோய்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். தேசிய தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது. உலக அளவில் சிக்குன்குனியாவின் அச்சுறுத்தல் தற்போது அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின்படி, உலகெங்கிலும் சுமார் ஐந்து பில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். […]

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களின் உடல்நிலையை கவனிக்க 30 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெற்றோர்களை கவனிக்க அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்; மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 20 நாட்கள் அரைச் சம்பள விடுப்பு, 8 நாட்கள் தற்செயல் […]