முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரையும் அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுக்காலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறைதண்டனைக்கு ஆளாகி, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு விடுதலை பெற்றுள்ள தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செய்தியையும், […]

படமே இல்லாமல் ஒரு சில படங்களை மட்டுமே நடித்துவரும் ஆர்யா சம்பள விஷயத்தில் கராராக நடந்துகொண்டதால் அந்த படத்திற்கு நடிகர் கார்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் கார்த்திக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளன. அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்துவிட்ட காரணத்தினாலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்த பெரும்புகழ்பெற்றதன் காரணத்தினாலும் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகின்றார். இந்நிலையில் ஆர்யாவுக்கு இதற்கு நேர் ஆப்போசிட்டாக ஒரு சில […]

இருசக்கர வாகனத்தில் கர்ப்பமான மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது அபராதம் செலுத்தச்சொல்லி போலீஸ் ஒருவர் கட்டாயப்படுத்தியதால் கர்ப்பிணி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனைக்கு தனது மனைவியை அழைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்தில் 3 பேர் வந்ததாக கூறி அபராதம் கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறியும் அவர் கேட்கவில்லை. நாங்கள் அவசரமாக ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்கின்றோம். எனது உறவுக்கார பெண்மணி […]

அங்கன்வாடி மையங்களில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில் 3 முட்டைகள் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அங்கன்வாடி மையங்களில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாரம் 3 முட்டைகள் வழங்கப்படும் என உயர்த்தி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு […]

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், ’ரஸ்னா’ என்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியவரும் அதன்  தலைவருமான அரீஸ் பிரோஜ்ஷாவ் கம்பாட்டா காலமானார். 1970களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட குளிர்பானங்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டதுதான் ரஸ்னா. மலிவு விலையில் கிடைப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ’ரஸ்னா’வுக்கு அடிமை என்றே கூறலாம். தற்போது ரஸ்னா உலகம் முழுவதும் 60 நாடுகுளில் விற்கப்படுகின்றது. 80ஸ், 90ஸ்களில் ’ஐ லவ் யூ’ ரஸ்னா என […]

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் 26ம் தேதி முதல் 412 நீட் பயிற்சி மையங்களில் நேரடியாக பயிற்சி தொடங்குகின்றது. தமிழ்நாட்டில் நீட் அமல்படுத்தப்பட்டவுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2017ம் ஆண்டு முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 412 பயிற்சி மையங்கள்அமைக்கப்பட்டு அதன் மூலம் நேரடியாக பயிற்சி அளிக்கப்படுகின்றது. 20221-2022ம் கல்வியாண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன், மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் ஆய்வகம் மூலம் […]

பட்டியலினத்தவர் குழாயை தொட்டுவிட்டதால் ’தீட்டு’ பட்டுவிட்டதாக… மாட்டின் கோமியத்தை வைத்து தீட்டை போக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படத்தியுள்ளது. பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஹெகோதாரா என்ற கிராமம் உள்ளது. எனவே அந்த ஊருக்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருக்கின்றார். தண்ணீர் தாகம் எடுத்ததால் தன் கையால் குழாயை திருப்பி தண்ணீர் குடித்துள்ளார். இதைக் கண்ட மேல்தட்டு […]

கேரளாவில் நீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்ற நபர் இது ஒண்ணும் தமிழ்நாடு இல்லை என சீறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவின் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருப்பவர் எஸ். மணிக்குமார். இவர் மீது நடந்த தாக்குதல் முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவரான தலைமை நீதிபதியை தாக்க முயன்ற மர்ம நபர் ’’இது ஒண்ணும் தமிழ்நாடு இல்லை’’ எனகூறிக்கொண்டே தாக்க முயன்றார். அவரை கைது செய்துபோலீசார் விசாரணை […]

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்ய உள்ளது. ராஜீவ்காந்தி படுகொலையான வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு கைதானவர்களில் நளினி,முருகன்,சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட்பயஸ் உள்ளிட்ட 6 பேர் கடந்த 11ம் தேதி விடுவிக்கப்பட்டனர். படுகொலை வழக்கில் 7 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நன்னடத்தை காரணமாக பேரறிவாளன் கடந்த மே […]

மங்களூருவில் குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்ட நபர் குக்கருடன் போட்டோ எடுத்துள்ளதாக வெளியாகும் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது இதில் பயணி மற்றும் ஓட்டுனர் காயம் அடைந்தனர். இதை பயங்கரவாத சம்பவம் என்று கார்நாடகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கம்பளம் பகுதியில் விடுதியில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜீம்ரகுமான் என்ற இளைஞரை கேட்டாறு காவல்நிலையத்திற்கு அழைத்துவந்துகாவல்துறை சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். […]