ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக மும்பை அணியின் நட்சத்திர வீரர் பொல்லார்ட் அறிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியதால் ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பியுள்ளது. பிசிசிஐ-ம் அதற்கேற்ற பணிகளை செய்து வருகிறது. அதாவது 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் மினி […]
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என பெயர் பெற்ற பழம்பெரும் நடிகரும் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா 350-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். எனினும் அவர் தமிழில் ஒரே ஒரு படத்தில் தோன்றி இருக்கின்றார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா, சுசி.கணேசன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான ’கந்தசாமி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதற்கு பின்னர் அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சிவாஜியின் ’தியாகி’ […]
ஈன்றெடுத்த தாயிடம் இருந்து பிரிந்துச் சென்ற குழந்தை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது பெற்றோரிடம் சேருவது குறித்த படங்கள் பல வந்திருப்பதை பார்த்திருப்போம். சமூக வலைதளங்கள் வாயிலாக சிலர் தங்களது பிள்ளைகளையும், பெற்றோரையும் கண்டறிந்தது குறித்த செய்திகளையும் கடந்து வந்திருப்போம். ஆனால், இறந்ததாக கூறப்பட்ட மகனை 17 ஆண்டுகள் கழித்து உயிரோடு கண்டறிந்த சுவாரஸ்யமான அதிர்ச்சியான சம்பவம் ஒன்று சீனாவின் மாகாணத்தில் நடந்திருக்கிறது. திரைப்படங்களையே மிஞ்சும் அளவுக்கு இந்த சம்பவத்தின் […]
விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள காடுவெட்டி கிராமத்தில் மின்சார துறையில் லைன் மேன் பழனி மற்றும் மகன் ராஜகுரு வசித்து வந்துள்ளனர். ரத்தப் புற்றுநோய் காரணமாக மகன் சென்ற ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ராஜ குருவின் தோழர்கள் மற்றும் கிராம மக்கள் 40 கும் மேற்பட்டோர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த சேகரிப்பு மையத்தில் ரத்ததானம் அளித்துள்ளனர். இறந்தவரை […]
சென்னை மாநகர பகுதியில் தாம்பரத்தில் காளிதாஸ் மற்றும் மகன் சுரேஷ் குமார் வசித்து வருகின்றனர். இவர் ஊர்களுக்குச் சென்று வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் வேலையை செய்து கொண்டிருந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் சம்மதித்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஏழு மணிக்கு புதுச்சேரி அருகே உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடந்துள்ளது. வரவேற்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று […]
கால்பந்தாட்ட வீராங்கனை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி சில நாட்களுக்கு முன்பு கால்பந்தாட்டத்தின்போது முட்டியில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவருக்கு உணர்விழப்பு நடைபெற்றது. கடந்த 8ம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருப்பது […]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை இந்திய டி20 அணியில் சேர்க்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு டி20 உலகக்கோப்பையிலும் இந்தியாவின் பேட்டிங் அணுகுமுறை மிகவும் பயந்து ஆடுவதுபோல் இருந்தது. மற்ற டி20 தொடர்களில் இந்திய அணி நல்ல தொடக்கத்தை அளித்தது உண்மை என்றாலும், 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஓபனர்கள் ரோகித் சர்மா மற்றும் கேஎல் […]
மிசோரமில் கல்குவாரி விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தெற்கு மிசோரமின் ஹனாதியால் மாவட்டத்தில் மவ்தார் பகுதியில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் நேற்று 13 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென குவாரியில் கற்கள் சரிந்து விழுந்துள்ளன. இதில், ஒரு தொழிலாளி தப்பி ஓடிய நிலையில், 12 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எல்லை […]
அமேசான் நிறுவனம் நஷ்டத்தை சந்திப்பதால், அதன் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த சில காலாண்டுகள் லாபகரமாக இல்லாததால், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் முதல் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மொத்த பணிநீக்கங்களின் எண்ணிக்கை சுமார் 10,000-ஆக இருந்தால், அது அமேசான் வரலாற்றில் மிகப்பெரிய […]
கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கிவிட்டதாக அறிவித்த நித்தியானந்தா, வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியாவை விட்டு சென்றுவிட்டதாக சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா அறிவித்தார். கைலாசா என்ற நாட்டின் அதிபராக இருப்பதாக கூறிய இவர், நிர்வாக ரீதியாக நாட்டிற்கான அமைச்சர்கள் பெயர்களையும் அறிவித்தார். மேலும், கைலைசா நாட்டிற்காக தனி வங்கி, தனி பணம் என்று கூறினார். ஆனால், அந்த நாடு எங்கு உள்ளது, எப்படி இருக்கும் […]