20 ஆண்டுகளுக்கு பிறகு, சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இன்று வோர்லியில் நடைபெறும் ஒரு கூட்டுப் பேரணியில் கலந்து கொள்கின்றனர்.. மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி அரசாங்கம் சமீபத்தில் மாநிலத்தின் தொடக்கப் பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்கும் முடிவை வாபஸ் பெற்ற பிறகு, ‘அவாஜ் மராத்திச்சா’ (மராத்தியின் குரல்) என்ற வெற்றிப் பேரணியை இரு கட்சிகளும் […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து […]

ரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, இரவு உணவின் போது சோஹாரி என்ற சிறப்பு பாரம்பரிய இலையில் உணவு பரிமாறப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தற்போது டிரினிடாட் மற்றும் டொபாகோ சுற்றுப்பயணத்தில் உள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூலை 4, 2025) அங்கு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, ​​சோஹாரி என்ற சிறப்பு இலையில் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. மேலும், இந்த […]

பாரத மாதாவை மதச் சின்னம் என்று அழைத்ததற்கு கேரள உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொள்ளும் விழா மேடைகளில் பாரதமாதா படம் அலங்கரித்து வைப்பது வழக்கம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பாரதமாதா படத்துக்கு கவர்னர் மலர் தூவி வணங்குவது வழக்கம். கவர்னர் மாளிகையில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பாரதமாதா படம் வைக்கப்பட்டு மலர் தூவி வழிபட்டதற்கு ஆளும் சி.பி.எம் கட்சியைச் […]

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பயன்களைப் பெற அனுமதி அளித்த அரசு உத்தரவு. கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலே, அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை 01.04.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு […]

ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி பேரழிவு நிகழும் என்று புதிய பாபா வங்கா கணித்த ஜூலை 5 இன்றுதான். கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். ஜப்பானை சேர்ந்த ரியோ டட்சுக்கி (ryo tatsuki) என்ற பெண் ‘புதிய பாபா வங்கா’ என அழைக்கப்படுகிறார். மார்ச் 2011 டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமி, 1995 கோபு பூகம்பம், பாடகர் ஃப்ரெடி மெர்குரியின் மரணம் போன்ற […]

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, பயிற்சி மையங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை 2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 3 ஆண்டுகளில், நான் முதல்வன் திட்டத்தால் 3 இலட்சத்து 28 ஆயிரத்து 393 மாணவர்கள், முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் […]

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுகவில் தொண்டரணி தொடங்கியது முதல் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் அனைத்து வெளியூர் பயணங்களிலும் உடன் இருந்தவர். அய்யாவு மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் […]

மொபைல் ஃபோன் இல்லாத உலகத்தை யாராலும் இனி கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. உண்மையில் சொல்லப்போனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகமே உள்ளங்கையில் சுருங்கியிருக்கிறது. இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்துள்ள ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சி இனி வரும் காலங்களில் அசாதாரணமான அளவில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2023ம் ஆண்டில் வெளியான ஆய்வுகளின்படி, உலக மக்கள் தொகையில் 80 % பேரிடம் செல்போன்கள் இருப்பதாக கூறுகின்றன. ஒருவர் […]

விஞ்ஞானிகள், நாம் வாழும் பூமியை எவ்வாறு சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாமல் பராமரிக்கலாம் என்று யோசனை செய்வதை விட , பூமியை போன்று மனிதர்கள் வாழ வேறு ஏதேனும் கிரகங்கள் உள்ளதா என்பதைதான் அதிகமாக ஆராய்ந்து வருகின்றனர். பூமியை தவிர வேறு கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா? என்று நீண்ட காலமாகவே விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கின்றனர் . இந்த ஆராய்ச்சிகள் சமீப காலத்தில் தொடங்கப்பட்டவை அல்ல. பல […]