கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இதற்கு காரணம் பள்ளி நிர்வாகம் எனக்கூறி பெரும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து 2 மாதங்களுக்கும் மேலாக பள்ளியை திறக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சாவில் மர்மம் இருப்பதாக ஸ்ரீமதியின் தாயார் தரப்பில் புகார் கூறப்பட்டது […]
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா அவசர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது சூப்பர் ஸ்டார் நடிகர் என்கின்ற அளவுக்கு உயர்ந்துள்ளவர் மகேஷ் பாபு. இவரின் தந்தை மூத்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை 1.15 மணியளவில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை […]
பாலிவுட்டின் பிரபலமான நடிகை ஒருவருக்கு அடிக்கடி வலிப்பு வருவது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது இதற்காக அவர் சிகிச்சை பெறுகின்றார் என்பது தெரியவந்துள்ளது. தங்கல் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபாத்திமா சனா. இவருக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தங்கல் படத்தில் கீதா போகத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே இப்படி ஒரு நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது […]
டெங்கு பாதிக்கப்பட்டு அதிகரித்த வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பருவகாலங்களில் கொசுக்களால் பரவக் கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இதன்படி பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் பாதிப்பு காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, பிரயாக்ராஜ் நகரில் ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளான நிலையில், பள்ளிக்கு ஒரு நாள் […]
பெங்களூருவில் தனியார் பள்ளியில் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு பானசவாடியைச் சேர்ந்த மாணவி அம்ருதா அதே பகுதியில் அமைந்துள்ள மரியம் நிலையா உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். பெற்றோர்கள் இது பற்றி விசாரித்ததில் ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்தது. கடந்த வாரம் நடைபெற்ற தேர்வின்போது […]
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், […]
டி20 உலகக்கோப்பை போட்டியை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.12.98 கோடி தொகை பரிசு கிடைத்துள்ளது. 8-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய […]
மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களின் வீடுகளுக்கு தலா ரூ.4,800 வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்தபிறகு அவர் கூறுகையில், ’’மயிலாடுதுறை மாவட்டம், கடலூர், கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]
லிவ் இன் முறையில் உடன் வாழ்ந்த காதலியை கொலை செய்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் டெல்லியை அதிரவைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த வாலிபர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர், மும்பையில் கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அங்கு உடன் பணிபுரியும் ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்த நிலையில், இந்த விவகாரம் […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பின்னர் சிறையில் இருந்து வெளிவந்த முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் திடீரென சிறையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்புஏற்பட்டது. திருச்சியில் அகதிகள் முகாமில் முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரிய முடிவு எடுக்காத காரணத்தால் நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த […]