பாலியல் மாத்திரைகளை உட்கொண்டு கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்ததால் கல்லூரி மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதைக் கண்ட ராஜ் கவுதம் (25) என்ற வாலிபர், மாணவியின் வீட்டுக்குள் நுழைந்து அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றுவதற்கு முன்னதாக ராஜ் கவுதம் பாலியல் ஊக்க மாத்திரை உட்கொண்டுள்ளான். இதனால் […]

நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கம் ஹேகட செய்யப்பட்டது குறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். திரைப்பிரபலங்கள்  பொதுவாக தாங்கள் சார்ந்த படங்களின் அப்டேட்,  தங்களது புதிய படங்களின் அறிவிப்பு  மற்றும் தங்களின் பர்சனல்  கொண்டாட்டங்கள் தொடர்பான தகவல்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக  ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.  ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும்  இடையே  ஒரு தொடர்பு ஏற்படுத்தும் ஒரு இணைப்புப் பாலம் போல செயல்படுபவை  பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம்  போன்ற சமூக வலைதளங்கள்.. […]

வங்கிகள் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வரும் 19ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஊழியர்களின் ஊதியம், வேலை ஒப்பந்தம், சேவையை மேம்படுத்துதல், வங்கிகளில் கணினி மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தங்கள் வாயிலாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் […]

வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவத்தை பயன்படுத்தும் முறையை மத்தி நிதி அமைச்சகம் முன் வைத்துள்ளது. வெவ்வேறு வகையான வரிசெலுத்துபவர்கள் 7 வகையாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வெவ்வேறு வகையான படிவங்கள் வழங்கப்படுகின்றன. நிதித்துறை அமைச்சகம் பொதுவான வருமான வரி தாக்கல் செய்ய அனைத்து வகையான வர செலுத்துபவர்களுக்கும் ஒரே மாதிரியான வருமான வரித்தாக்கல் படிவத்தை கொண்டுவர உள்ளது. ட்ரஸ்ட் மற்றும் நான் ப்ராபிட்டபிள் அமைப்புகளைத் தவிர […]

ரச்சிதாவின் கணவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வரப்போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு ஏற்றார் போல பிக்பாஸும் கடினமான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார். வாரா வாரம் நிகழும் சண்டையில் தனலட்சுமியின் பெயர் இல்லாமல் இருந்ததே இல்லை. சரி சண்டைகள் ஒரு பக்கம் இருக்கிறது என்றால் இன்னொரு […]

ஸ்பெயினில் கிராமம் ஒன்று ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு தயாராக இருப்பதாக வெளியிடப்பட்ட விளம்பரம் வைரலாகி வருகிறது. ஸ்பெயின் நாட்டில் சால்டோ டி காஸ்ட்ரோ என்ற கிராமம் அமைந்துள்ளது. மெட்ரிட் நகரில் இருந்து 3 மணி நேர பயண தூரத்தில் சால்டோ கிராமம் உள்ளது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகள் நாடுகளின் எல்லை அமைந்துள்ள இந்த கிராமம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இந்த கிராமத்தில் 44 வீடுகள், […]

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை வெளியே நடமாட விடுவது தவறு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளன் முன்னரே விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமிருந்த 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், […]

கர்நாடக அருகே நர்சுகளுடன் உல்லாசமாக இருந்ததுடன் பிணவறையில் பெண் உடல்களை நிர்வாணமாக படமெடுத்த ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி அருகே கடகதாலு கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதான சையத். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் மடிகேரி அரசு மருத்துவமனையில் பிணவறையில் ஒப்பந்த பிணவறை ஊழியராக பணி அமர்த்தப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பால கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதாக […]

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும். முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும். வீடுகளில் தண்ணீர் புகுந்தால் ரூ.4800 வழங்கப்படும் […]

சீர்காழிக்கு சென்னையில் இருந்து சிதம்பரம் வழியே அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து நள்ளிரவு நேரத்தில் சிதம்பரத்திற்கு வந்தபோது பயணிகள் கீழே இறங்கி கடைகளுக்கு சென்றனர். ஐந்து பயணிகள் மட்டும் பேருந்தில் இருந்தனர். இதை தொடர்ந்து சீர்காழியை நோக்கி பேருந்து புறப்பட தயாரான நேரத்தில் பின்புறம் இருக்கும் டீசல் டேங்க் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், பயணிகள் மற்றும் நடத்தினர் பேருந்தில் இருந்து […]