சென்னையில் வாகன சோதனையில் இளைஞர்கள் விட்டுச் சென்ற பையை சோதனை செய்தபோது பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது. சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 3 இளைஞர்கள் பைக்கில் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தியபோது நிற்கவில்லை. போலீசார் துரத்திச் சென்றபோது பை மட்டும் கிடைத்துள்ளது. அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பினர். அந்த பையை சோதனை செய்தபோது அவர்களில் ஒருவர் நாகூர் மீரான் என்பது தெரியவந்தது. நாகூர் மீரான் வைத்திருந்த […]
திருமணமாகி குழந்தை பிறந்த பின்னரும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனுக்கு தொல்லை கொடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் கழுத்தை நெறித்து கொலை செய்தான். ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் அருகே ராமாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ரேஷ்மா லதா(21). சென்னையை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் தலைப்பிரசவத்திற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு வந்திருக்கின்றார். குழந்தை பிறந்து […]
யூடிபில் பளபளக்கும் மேனியையும் ஆரோக்கியத்தையும் பெற செங்காந்தாள் என்ற செடியின் கிழங்கை சாப்பிடலாம் என்ற தகவலை பார்த்து சாப்பிட்டவர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள கிராமம் மின்னூர். இப்பகுதியைச் சேர்ந்த 25 வயது நபர் லோகநாதன். இவரது நண்பர் நாட்ரம்பள்ளியை சேர்ந்த ரத்தினம் (35) இருவரும் கல் குவாரியில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் செங்காந்தாள் என்ற செடியின் கிழங்கை சாப்பிட்டால் மினுமினுக்கும் […]
நாளை நடைபெற உள்ள பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையேயான டி20 உலக கோப்பை இறுதிச்சுற்று போட்டிக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான்-இங்கிலாந்து மோதும் டி.20 உலக கோப்பை போட்டி இறுதிச் சுற்றுப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மழை வெளுத்து வாங்குகின்றது. அரையிறுதியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதையடுத்து இங்கிலாந்துடன் மோதும் வாய்ப்பை பெற்றது. நாளை இறுதிச் சுற்று நடைபெற உள்ளது. மெல்போர்னில் மழை காரணமாக நாளை […]
டென்னிஸ் நட்சத்தரமான சானியா மிர்சாவும் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் விவாகரத்து செய்வதாக தகவல் வெளியான நிலையில் தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சானியா மிர்சாவும் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் கடந்த 2010ல் திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து துபாயில் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்தியாவைச் சேர்ந்த சானியா பாகிஸ்தானின் சோயிப் மாலிக்கைதிருமணம் செய்தது முதலில் இந்திய ரசிகர்கள் எதிர்த்திருந்தாலும் பின்னர் அதை ஏற்றுக்கொண்டனர். […]
நேற்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது ஒரு மணி நேரம் என்ன பேசினோம் என்பதை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு அளித்தனர். மாநிலத் தலைவர் என்ற முறையில் காரில் பயணித்த அண்ணாமலை தன்னுடன் மோடி என்ன பேசினார் என்பதை பகிர்ந்துகொண்டுள்ளார். மாநிலத் தலைவர் என்ற முறையில் என்னை வாகனத்தில் […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 32 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினி உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அவர் வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1998ம் ஆண்டு 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில், படிப்படியாக 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், பேரறிவாளன், […]
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கானை மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. துபாய் செல்வதற்காக மும்பை விமான நிலையம் வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவர் விதிகளை மீறி அதிக விலையுடைய ஆடம்பர கைக்கடிகாரங்களை எடுத்துச் சென்றதற்காக அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதற்காக நடிகர் ஷாருக்கான் ரூ.6.83 […]
வரும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் கட்டாயம் உறுதி மொழி ஒன்றை எடுக்க வேண்டும் என்று அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமரும் மறைந்த தலைவருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினவிழா கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல் மேல்நிலைப் பள்ளி […]
பிரபல நடிகை பிபாஷா பாசுவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தலங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபல நடிகை பிபாஷா பாசு மற்றும் நடிகர் கரண் சிங் ஒன்றாக நடிக்க ஆரம்பித்தபோதே காதலித்தனர். இதையடுத்து கடந்த 2016ல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இன்ஸ்டாகிராமில், தான் கருவுற்றிருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு தகவலை பரிமாறிக் கொண்டார். இந்நிலையில் பிபாஷா பாசுவுக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]