குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் பின்னணியில் மிக அதிகமான பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் அதிக அளவிலான பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே குஜராத்தில் ரூ. 71.88 கோடி மதிப்பிலான பணமும், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது […]
தமிழகத்தில் வரும் 15-ம் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அடுத்த இரு தினங்களில் தமிழக கேரள பகுதிகளை கடந்து செல்லக்கூடும். இதன் காரணமாக இன்று […]
ஆன்லைன் மூலம் இபிஎஃப் இருப்பு தொகை சரி பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.. EPFO அதன் சேவைகளை, அமைப்புகளை பல வழிகளில் செயல்படுத்தவும் மாற்றியமைக்கவும் தொடர்ந்து முயன்று வருகிறது, அந்த வகையில் இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் இபிஎஃப் அல்லது PF பயனாளிகள் யுனிவர்சல் கணக்கு எண் (UNA) இல்லாமல் கூட உங்கள் பிஎஃப் மற்றும் ஈபிஎஃப்ஓ தொகையை சரிபார்க்க முடியும். இதற்காக இபிஎஃப்ஓ சந்தாதாரர் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் நாம் சரிபார்த்துக் […]
மகளிருக்கான சுய தொழில் கடன் திட்ட விழிப்புணர்வு முகாம் வருகின்ற 15-ம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு மாவட்ட தொழில் மையம் முலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் , புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் […]
புறநகர் அல்லாத ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருந்து UTS மொபைல் செயலியில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரயில்வே அனுமதிக்கும். ரயில் பயணிகளுக்கு நிம்மதி தரும் வகையில், UTS மொபைல் செயலியில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை புறநகர் அல்லாத பிரிவுகளில் உள்ள நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருந்து முன்பதிவு செய்ய ரயில்வே அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இது இப்போது 5 கி.மீ. புறநகர் பகுதிகளில், தற்போதுள்ள […]
சேலம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி […]
கனமழை காரணமாக 25 மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை காரணமாக 25 மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருவாரூர், தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், இராமநாதபுரம் ஆகிய மாநிலங்களுக்கு வழிமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் அரைஇறுதியில் நுழைந்தது இந்திய அணி. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. அடிலெய்ட் ஓவலில் நடந்த அரைஇறுதியில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் ஒரு விக்கெட்டை […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய், கரும்பு ஆகியவற்றை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உள்ளது. அதில், இந்தாண்டு பொங்கலுக்கு வழங்கியது போல், பலவித மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு […]
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது பிரபல தொலைக்காட்சி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி காலமானார். அவருக்கு வயது 46. Kkusum, Waaris, Suryaputra Karn போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அறியப்பட்ட நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி இன்று காலமானார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது சித்தாந்த் வீர், சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இவரை மருத்துவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் அது பலனளிக்காமல் போனது. […]