ஆந்திராவில் ஒரு ஏழைக் குடும்பத்தின் நிலத்தை அரசியல் செல்வாக்கு படைத்த நபர்கள் அபகரித்ததோடு மட்டுமல்லாமல், தாயையும், மகளையும் குழித்தோண்டி உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹரிபுரம் கிராமத்தை சேர்ந்த தாய் தாளம்மா, மகள் சாவித்திரி ஆகியோருக்கு சொந்தமான வீட்டுமனையை அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராவ், பிரகாஷ்ராவ், ராமராவ் ஆகிய 3 பேர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. தங்கள் […]
கரூர் மாவட்ட பகுதியில் மருதம்பட்டியில் கூலித் தொழிலாளியான முகேஷ் குமார் மற்றும் அவரது மனைவி ஜோதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலையில் உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கியது. அப்போது ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஊசி செலுத்தப்பட்ட […]
திருப்பத்தூர் மாவட்ட பகுதியை சேர்ந்த பாலு மற்றும் தேனி மாவட்ட பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவர் இருவரும் சிறு வயதிலிருந்தே கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள். இருவரும் படித்து பட்டம் பெற்றவர்கள். இவர்கள் பல நாட்களாக காதலித்து வந்ததை தொடர்ந்து போதிய பொருளாதார வசதி இல்லாமையால் திருமணம் செய்வதில் இடர்பாடு இருந்து வந்துள்ளது. இந்த செய்தியை அறிந்த அந்த பகுதி காவல்துறையினர் அருகில் உள்ள முருகன் கோவில் இவர்களின் திருமணத்தை […]
தெலுங்கு மொழியில் நடிகர் அர்ஜுன் இயக்க உள்ள திரைப்படத்தில் அவர் மகளுடன் நடிக்க மறுப்பு தெரிவித்ததால் கேவலப்படுத்திவிட்டார் என்று கதாநாயகன் தெரிவித்துள்ளார். தமிழ் படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். தன் மகள் ஐஸ்வர்யாவை வைத்து தெலுங்கில் ஒரு படம் இயக்கி தயாரிக்கின்றார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக தெலுங்கு பட கதாநாயகர் விஷ்வக் நடிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடக்க இருந்த நிலையில் ஹீரோ வரவில்லை என்றும் […]
அரியலூர் அருகே குடும்ப சண்டையில் 5 மாத கர்ப்பிணியின் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி, மாமனார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கணவனும் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜய் பிரகாஷ். இவரது மனைவி அபிராமி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். இதற்கிடையே, அபிராமி 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். […]
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.38,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை குறைந்து விற்பனையாகிறது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து, ஒரு கிராம் […]
காதலித்த பெண்ணை காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு ஆலமிப்பள்ளியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருபவர் வினோத் குமார். இவரது மனைவி கே.எஸ்.மினி. இவர்களுடைய ஒரே மகள் நந்தா வினோத். இவர் கண்ணங்காட்டில் உள்ள சி.கே.நாயர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இதற்கிடையே, நந்தாவும் அதே பகுதியில் வசித்து […]
காதலனை சந்தித்து வந்ததிலிருந்து கடுமையான வயிற்று வலியால் போராடிய கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர் (56). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி தங்கபாய் (51) என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இதில், இரண்டு பேருக்கு திருமணமான நிலையில், மூன்றாவது மகள் அபிதா, களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாவது ஆண்டு படித்து வந்தார். இவர் […]
விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ளது வடக்கு மலையடிப்பட்டி எனும் கிராமம். அந்த பகுதியில் மகேஸ்வரன் மற்றும் மகன் கவிதேவநாதன் (6) வசித்து வந்துள்ளனர். சிறுவனுக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டதால் அரசு டாக்டர் பாஸ்கரனின் கிளினிக்கிற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அதே பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்த போது ,ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் […]
திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் கவுதம் இருவரும் வசித்து வருகின்றனர். இளைஞர் கவுதமுக்கு 2016ம் வருடம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பேஸ்புக் மூலமாக அறிமுகம் கிடைத்ததை தொடர்ந்து அதுவே சில நாட்களில் காதலாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், திடீரென்று அந்த இளம்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கவுதமிடம் கூறியுள்ளார். அந்த பெண் கூறியதில் கோபமடைந்த கவுதம் தன்னை […]