லாரி ஓட்டுனர் சீருடை பேண்ட் அணியவில்லை என்ற காரணத்திற்காக ரூ.500 அபராதம் விதித்த டிராபிக் போலீஸை சரமாரியாக கேள்வி கேட்ட சம்பவம் வைரலாகி வருகின்றது. சென்னையில் வாகன சட்டங்களை மீறியதற்காக பல்வேறு வாகன ஓட்டிகளிடம் டிராபிக் போலீஸ் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் லாரி ஓட்டுனரை அழைத்து டிராபிக் போலீஸ் ஒருவர் அபராதம் வசூலித்துள்ளார். சீருடைக்கு பேண்ட் அணியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக ரூ.500 அபராதம் விதித்துள்ளார் அந்த […]
ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 186 ரன்கள் எடுத்து 187 ரன்களை இலக்காக நிர்ணயத்துள்ளது. உலககோப்பை டி20 போட்டியில் ஜிம்பாப்வே-இந்தியா விளையாடி வருகின்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இணை […]
பிரதமர் மோடி முன்னிலையில் நடிகர் விஷால் பாரதிய ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் ஆக்ஷன் ஹீரோவான நடிகர் விஷால் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுபற்றி கடந்த மாதம் ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது விஷாலிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஷால், ஒருவர் 100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தாலே அவர் அரசியலுக்கு வந்து […]
திருவள்ளூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த பின் நடிகர் விஷால் பேட்டிஅளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் இன்று 11 ஏழை ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு 3 மத முறையிலும் வழிபட்டு ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலி எடுத்துக் கொடுத்து இலவச திருணத்தை அவர் நடத்தி வைத்தார். அத்துடன் 51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு […]
விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கூடுதலாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. தற்போது ஆட்சிக் காலம் முடிந்து, இம்மாதம் 12ஆம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். […]
நடிகர் விஷால் பா.ஜ.க.வில் இணைவதாக வெளியான தகவலை அடுத்து ஆன்மீக கண்ணோட்டத்தில் பாருங்கள்என்று விளக்கம்அளித்துள்ளார். நடிகர் விஷால் காசிக்கு சென்று தரிசனம் செய்த பின் அங்கு புணரமைப்பு பணிகள் மிக சிறப்பாக மேற்கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்தார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ’’அன்புள்ள மோடி அவர்களே, நான் காசிக்கு சென்று சிறப்பான தரிசனத்தை பெற்றேன். கங்கையின் புனித நீரை தொட்டேன். கோயிலை புதுப்பித்து அதை […]
அசல் கோலார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின், பெண்களிடம் எல்லை மீறும் மற்றொரு போட்டியாளர் குறித்த வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பம் முதலே விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் நபராக வந்த ஜிபி முத்து, முதல் நபராகவே வெளியேறிவிட்டார். அதன்பிறகு, சாந்தி மற்றும் அசல் கோலார் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். […]
மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஏரியில் விழுந்து விமானம் நொறுங்கியது. தான்சானியாவில் ’தர் எஸ் சலாம்’ என்ற நகரில் இருந்து புகோபா நகருக்கு விமானம் புறப்பட்டது. புகோபா விமான நிலையத்தில் தரையிறங்க தயார் நிலையில் இருந்தபோது மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. விமானம் கீழே விழுந்த இடம் […]
பருவமழையால் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவையாறு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான, கல்லணை புதிய பாலம் வழியாக, போக்குவரத்து புதிய வழித்தடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர், திருவையாறு புறவழிச் சாலை திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கல்லணை வழியாக திருச்சிக்கு போக்குவரத்து வழிதடங்களை திறந்து […]
நாய்க்கு தாமதமாக சோறு வைத்த காரணத்தினால் உறவுக்கார பையனை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் மன்னேகோடே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் ஹர்ஷத் மற்றும் ஹக்கீம். இன்று காலை ஹக்கீமும் அவரது நண்பர்களும் ஹர்ஷத்தை மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்களிடம் ஹர்ஷத் மாடியில் இருந்து விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அந்த நபருக்கு சிகிச்சை அளித்த நிலையில் அவன் மரணமடைந்தான். இதையடுத்து […]