ஜார்கண்ட் மாநிலத்தில் ராம்நகர் மாவட்ட பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சென்ற மாதம் 10ஆம் தேதி அன்று பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் மார்பு எலும்புக்கு கீழே வயிற்றில் கட்டி போல் இருந்ததை மருத்துவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் அந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து தான் அகற்ற வேண்டும் என்று பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து இந்த மாதத்தின் 1 ஆம் தேதி அன்று அறுவை சிகிச்சை நடந்தது. […]

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக முன்னாள் அமைச்சரான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர், “சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் செய்த ஓபிஎஸ் அவரிடமே சரணடைந்துள்ளார். இது தர்ம யுத்தம் 2.0 அல்ல, கர்ம யுத்தம். ஓபிஎஸ் அதிமுக அரசையே எதிர்த்து வாக்களித்துள்ளார். மேலும், புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகையை உடைத்து மற்றும் ஜெயலலிதாவின் அறையையும் […]

திருப்பூர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, மாநகராட்சி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியும், முதலிபாளையம் பகுதியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்த ரியாஸ் அகமது (23) என்பவரும் பழகி வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் , சில நாட்களுக்கு முன்பு ரியாஸ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை கடத்திச் சென்றுள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அதனால் அதிர்ச்சி […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,082 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 07 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,047 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Computer Operator And Programming Assistant பணிகளுக்கு மொத்தம் பத்து காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கபட்டுள்ளது. […]

இந்திய இராணுவத்திற்கு அக்னி வீரர்‌ (ஆண்கள்‌), அக்னி வீரர்‌ (ராணுவ பெண்‌ காவலர்‌), இராணுவ தொழில்நுட்ப உதவி செவிலியர்‌, உதவி செவிலியர்‌ (கால்நடை மருத்துவம்‌), மற்றும்‌ இளநிலை அதிகாரிகள்‌ (மதஆசிரியர்‌) ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள்‌ தேர்வு செய்யப்படவுள்ளனர்‌. இதற்கான தேர்வு முகாம்‌ வரும்‌ நவம்பர்‌ 15.11.2022 முதல்‌ 29.11.2022 வரை வேலூரில்‌ உள்ள மாவட்ட விளையாட்டு திடலில்‌ நடைபெறுகிறது. இதில்‌ பங்கேற்க வரும்‌ விண்ணப்பதாரர்கள்‌ https://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ள […]

தேசியத் தலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று டெல்லி அரசு அறிவித்தது. அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் மாநிலத்தில் மூட வேண்டும் என்ற உத்தரவு எடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில், […]

எடப்பாடி ஆதரவாளர்கள் பாஜகவில் இணைவார்கள் என புகழேந்தி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி; அதிமுகவின் பொது செயலாளர் பதவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தவிர வேறு யாருக்கும் கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி இவர்களில் யார் நினைத்தாலும் அவர்களின் கனவு ஒரு நாளும் நிறைவேறாது. தங்கமணி திருந்த வேண்டும் இல்லையென்றால் களத்தில் இறங்க வேண்டி […]

மருத்துவத்துறையில் தொழில் ஆலோசகர் பதவி, குடிசை மாற்று வாரிய சமூக ஆர்வலர் பதவிக்கான எழுத்துத்தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டுப்பணியில் அடங்கிய சமூக ஆர்வலர் ஆகியப்பதவிகளுக்கான கம்ப்யூட்டர் மூலம் தேர்வு வரும் […]

பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை, கோழி தீவனம், தீவன மூலப்பொருட்கள் வாங்க தடை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கேரள மாநிலம்‌ ஆலப்புழா மாவட்டத்தில்‌ பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஈரோடு மாவட்டத்தில்‌ பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி. ஈரோடு மாவட்டத்தில்‌ பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ தாக்குதல்‌ எதுவும்‌ இல்லை. பறவைக்காய்ச்சல்‌ […]