தமிழக அரசின் மகளிர் நலனுக்கான மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக மாறியுள்ள “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்திற்கான விரிவாக்க விண்ணப்ப பதிவு மீண்டும் தொடங்கியுள்ளது. இதனை பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்தே பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், மாநிலம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற தலைப்பில் சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் இந்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த […]

பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 57 வயது நபர் இறந்ததைத் தொடர்ந்து, கேரளாவில் நிபா வைரஸால் ஏற்பட்ட இரண்டாவது மரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவி வருகிறது. வவ்வால்கள் மூலம் இந்த வகை வைரஸ் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வவ்வால்கள் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை சாப்பிடுவதன் வாயிலாகவோ, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலோ நோய் தொற்று ஏற்படும். […]

உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், முதல்முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்ற நிலையில், நடிகர் விஜய் ஸ்டைலில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர். […]

இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் 2005 ஆம் ஆண்டு, தனது 15 வயதில் ஆசிய விளையாட்டு போட்டியை வென்றார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இது ஒலிம்பிக்கில் அவரது சிறந்த செயல்திறன் ஆகும். சாய்னா தனது வாழ்க்கையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார், அவற்றில் 2 பெண்கள் ஒற்றையர் பிரிவிலும், ஒன்று கலப்பு இரட்டையர் பிரிவிலும் […]

நீங்கள் வீட்டுக் கடன் வாங்க விரும்பினால், குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் வங்கிகளின் பட்டியலை முதலில் சரிபார்க்க வேண்டும். தமிழகத்தில் வீட்டுக் கடன் பெற விரும்புவோருக்கு புதிய விதிமுறைகளை வங்கிகள் தற்போது அறிமுகம் செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, சிறு நிதி வங்கிகள் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்க கூடுதல் ஆவணங்களையும், சில சரிபார்ப்பு முறைகளையும் தற்போது கட்டாயமாக்கியுள்ளன. […]

நீங்கள்புதிய நிலம் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா?. அப்போ, சொத்து பதிவு விதிமுறைகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையிலிருந்து, நிலம் வாங்கத் திட்டமிடும் ஒவ்வொருவரும் இந்த புதிய விதிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுவது மிகவும் முக்கியமானது. இந்தியாவில் நிலம் அல்லது சொத்தை வாங்கும் போது பதிவு செய்வது ஒரு முக்கியமான சட்ட செயல்முறையாகும், இது சொத்தின் உரிமையை உறுதி செய்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சமீபத்தில் இந்த […]

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் மொழி திறன் தேர்ச்சியில் இருந்து மின் வாரியம் விலக்கு அளித்துள்ளது. மின்வாரியத்தில் தற்போது பணியில் உள்ள காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ் மொழி தேர்வு சான்றிதழ் இல்லாமல் பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மின்பகிர்மான வட்டங்களில் பணியாற்றும் மாற்றுத்திறன் பணியாளர்களின் தகவல்களை சேகரித்து அனுப்புமாறு அனைத்து முதன்மை பொறியாளர்கள் மற்றும் […]

கோயில்களுக்கு வரக்கூடிய நிதி ஆதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசை பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு நிதியில் கல்லூரிகள் கட்டாமல், கோயில் நிதியில் ஏன் கட்டுகிறீர்கள்? என்று நியாயமான ஒரு கேள்வியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேட்டிருந்தார். பழனிசாமி, கோயில் நிதியை கல்விக்காக செலவழிக்கக் கூடாது என்கிறார். கல்விக்கு எதிராக […]