1990களில் தென்னிந்தியாவில் பல வெடிகுண்டு மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதி அபுபக்கர் சித்திக், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது அலியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) பல மாதங்களாக மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. இருவரும் தற்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றக் காவலில் […]

ஐபிஎல் 2026க்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட்டு வெளியேறி சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது உண்மையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்திய தகவலின்படி, சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை வாங்க மிகவும் ஆர்வமாக உள்ளது. சிஎஸ்கேவைத் தவிர, மற்ற அணிகளும் அவரை வாங்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சாம்சன் ஆர் ஆர் அணியை விட்டு விலகுவது குறித்து […]

இந்திய கிரிக்கெட் அணி தங்கியுள்ள ஹோட்டலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பார்சல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஹோட்டலிலேயே இருக்குமாறு BCCI அறிவுறுத்தியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்தின் பர்மிங்காமில் தங்கி இருந்த இந்திய அணி வீரர்கள் வழக்கம்போல் ஹோட்டலுக்கு அருகிலுள்ள பிராட் ஸ்ட்ரீட் போன்ற இடங்களை சுற்றிப் பார்க்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சென்டனரி சதுக்கத்தில் சந்தேகத்திற்கிடையான ஒரு பார்சல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களால் அவர்கள் வெளியே செல்ல […]

உத்தரப்பிரதேசத்தில் சாக்கடையில் விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றியபோது எதிர்பாராதவிதமாக கடித்ததை அலட்சியமாக விட்டதால் கபடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹரில் உள்ள ஃபரானா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரிஜேஷ் சோலங்கி, கபடி வீரரான இவர், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுவருகிறார். இந்தநிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அதாவது மார்ச் மாதத்தில் அவரது கிராமத்தில் சாக்கடையில் விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத […]

விண்வெளி வீரர்கள், விண்வெளியில் நடப்பது என இவை அனைத்தும் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம், ஆனால் விண்வெளியில் நாட்களை கழித்தவர்களுக்கு மட்டுமே உண்மையான சிரமம் தெரியும். ஈர்ப்பு விசை வேலை செய்யாத இவ்வளவு உயரத்தில் உயிர்வாழ என்ன தேவை என்பது நாம் அனைவரும் நன்கு அறிவோம். விண்வெளியில், ஈர்ப்பு விசை இல்லாமல், விண்வெளி வீரர்களால் பூமியில் எளிதாகச் செய்யக்கூடிய பல விஷயங்களைச் செய்ய முடியாது. சாப்பிடுவது, தூங்குவது மற்றும் வசதியாக நடப்பதில் […]

மத்திய பணியாளர் தேர்வாணையம் பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணி மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர் மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு 2025 குறித்து மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்களில் பன்முகத்திறன் பணியாளராக […]

இந்தியாவில் பல வரலாற்று கோட்டைகள் உள்ளன, அவற்றில் ஆழமான மர்மங்கள் சூழ்ந்துள்ளன. இங்கு ஆட்சி செய்த மன்னர்கள் தங்கள் ராஜ்யத்தைப் பாதுகாக்க கோட்டைகளைக் கட்டினார்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோட்டைகளும், தனித்துவமான அம்சங்களையும் வரலாற்றுக் கதைகளையும் பெருமைப்படுத்துகின்றன. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருத் என்ற கடற்கரை கிராமத்தில் இதேபோன்ற ஒரு கோட்டை அமைந்துள்ளது, இது முருத் ஜஞ்சிரா கோட்டை என்று அழைக்கப்படுகிறது . கடல் மட்டத்திலிருந்து 90 அடி […]

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்கள் தலைமையிலான குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு சீராக இல்லை எனவும், […]