சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டுவது போல் வீடியோ வெளியான விவகாரத்தில் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ நேற்று வைரலானது. பள்ளி சீருடையில் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த மாணவிக்கு மாணவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டும் வீடியோ நேற்று பேசு பொருளாக […]

மனைவியைக் கொலை செய்ய திட்டமிட்ட கணவனின் வலையில், மாமியார் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டம் சாய்கேடா கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவரால், வீட்டில் தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர் சண்டைகளால் அண்மையில் கணவன் வீட்டிலிருந்து வெளியேறிய மனைவி, தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். மனைவி வீட்டைவிட்டு வெளியேறியதால், ஆத்திரமடைந்த கணவன், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். […]

தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உதவி மருத்தவர் பணியிடங்களில் நியமனம் வழங்கப்படும் என்று தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. உதவி அறுவை சிகிச்சை பணியிடங்களுக்கு தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்க மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் […]

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதில் வேறு பொருட்களை அந்நிறுவனங்கள் அனுப்பும் சம்பவம் அண்மைக் காலமாக தொடர்ந்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது இம்மாதிரியான சமயங்களில் அதிருப்தியில் இருப்பார்கள் அந்தவகையில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் கைக்கடிகாரம் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், பார்சலில் வந்ததோ மாட்டுச்சாணம். உத்தரப்பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள […]

திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின் கீழ் மாநகராட்சியில் யாராவது குப்பைகளை தெருக்களில் கொட்டினால் ஆதாரத்தோடு காட்டி கொடுத்துவிட்டு ரூ.200 அன்பளிப்பாக பெறுங்கள் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு […]

ஆசிரியர் கொடூரமாக தாக்கியதால், சிறுவனின் தலையில் மூன்று நரம்புகள் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம் புத்தா நகரின் பாம்பாவாட்- மஹாவத் சாலையில் கேப்டன் சன்வாலியா பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சோரன் என்ற ஆசிரியர் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். இந்நிலையில், தேர்வு நெருங்கிவருவதால் மாணவர்கள் நன்றாக படித்துவர வேண்டும் என்றும், மறுநாள் அனைத்து கேள்விகளுக்கும் […]

விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான காப்பீடு சய்வதற்கு அடுத்தமாதம் 15ம் தேதிக்குள் விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது ஒன்றை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்குள்ளாக ஒட்டு மொத்தமாக சம்பா சாகுபடி செய்து முடிக்கப்படும். நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு மூலமாக இந்த […]

இளம்பெண்ணை ஏமாற்றி, அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் ஸ்வேதா (22). தாய்-தந்தையை இழந்த இவர், தனது அத்தை, மாமா பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். ஸ்வேதா, மேலக்காவேரியில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டரிடம், வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், துக்காம் பாளையம் தெருவைச் சேர்ந்த தியாகராஜன் (27) என்பவர் ஸ்வேதா வேலைபார்க்கும் இடத்திற்கு அடிக்கடி சென்று வரவே […]

ஓமலூர் அருகே சிறுவனை கடத்திச் சென்று தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவி, 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவன், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற நிலையில், திடீரென மாயமாகியுள்ளார். நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகனை காணவில்லை […]

மத்தியபிரதேசத்தில் மஹாகாளீஸ்வர் கோயில்மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான கோயில் அமைக்கப்பட்டுள்ளது.. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கா என்றழைக்கப்படும் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் சுமார் 836 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. மஹாகல் லோக் காரிடர் எனவும் அழைக்கப்படுகின்றது. இன்று முதல் மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது. மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பூஜை செய்த பின்னர் கார்த்திக் மேளா மைதானத்தில் உரை நிகழ்த்தினார். […]