தபால்காரர், அஞ்சல் காவலர்கள் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய அஞ்சல்துறை அறிவித்துள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியா போஸ்ட் இணையதளமான indiapost.gov.in இலிருந்து ஆட்சேர்ப்பு அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆட்சேர்பு மூலம் மொத்தம் 98,083 பணியிடங்கள் நிரப்பப்படும். நாடு முழுவதும் உள்ள 23 வட்டங்களில் காலி பணியிடங்களை திறக்க அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2022: காலியிட விவரங்கள் தபால்காரர்: 59099 […]
இந்தியா,பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர், இந்து, முஸ்லீம் இடையே வகுப்புவாதம் வன்முறையாக வெடிதது. இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் ஞாயிற்றுக்கிழமை இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வென்றது. இந்தியா, பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை அடுத்து ரசிகர்களிடையே மோதல் உண்டானது. இதனிடையே, லீசெஸ்டர்ஷையரில் இருக்கும் ஒரு இந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக […]
ரஷ்யா உடனான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பல இந்திய மருத்துவ மாணவர்கள் உக்ரைனுக்குத் திரும்பி, தங்கள் படிப்பைத் தொடர முடிவு செய்துள்ளனர்.. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் அதன் ஏழாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக உக்ரைனில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் தங்களின் சொந்த நாடுகளுக்கு […]
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் இருக்கும் நைகாரி என்ற பகுதியில் வசித்து வரும் 16 வயது இளம்பெண் கடந்த சனிக்கிழமை மாலை அவருடைய ஆண் நண்பருடன் அருகே இருந்த கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலுக்கு அருகே இருந்த இடத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் அங்கு வந்துள்ளனர். இளம் பெண்ணின் ஆண் நண்பரை தாக்கி விட்டு அந்த ஆறு பேரும், ஆண் நண்பரின் […]
தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 21, 22 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை […]
’பிரின்ஸ்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும் கைப்பற்றியுள்ளது. தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கத்தில் ’பிரின்ஸ்’ எனும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காமடி ஜானரில் உருவாக்கப்பட்டு வருகிறது. சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும், பிரேம்ஜி இப்படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். தமன் இசையமைக்கும் […]
பெற்றோர்கள் முன்னிலையில் இரு அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நகரப் பகுதியான லால் பகதூர் சாஸ்திரி வீதியில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால், இப்பள்ளியில் படித்து வந்த மாணவிகளை குருசுகுப்பம் பகுதியில் இயங்கி வரும் என்.கே.சி. பெண்கள் அரசுப் பள்ளியில் தற்காலிகமாக […]
கொரோனா ஊரடங்கின் போது ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சியடைந்தன.. அந்த வகையில் தற்போது பலரும் நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களை சப்ஸ்கிரைப் செய்து தங்களுக்கு விருப்பமான வெப் சீரிஸ், படங்களை பார்த்து வருகின்றனர்.. அந்த வகையில் Netflix ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஸ்ட்ரீம்களை மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால் தங்களின் கணக்கில் வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பது பலரின் சந்தேகமாக உள்ளது.. எனவே உங்கள் கணக்கை வேறு […]
நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம், தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’. இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு […]
ராகிங்கை தடுக்க அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராவை பொருத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.. நடப்பு கல்வியாண்டுக்கான ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.. இதுகுறித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் “ ராகிங்கை தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். ரேகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.. முக்கிய இடங்களில் எச்சரிக்கை […]