”ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் யாரும் சசிகலா பக்கம் செல்லமாட்டார்கள்” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காமராஜரின் 48-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள காமராஜர் நினைவகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கிங் மேக்கராக இருந்தது பல தலைவர்களை உருவாக்கிய பெருமை காமராஜருக்கு உண்டு. தற்போது குழப்பத்தின் உட்சத்தில் திமுக அரசு உள்ளது. திமுக அமைச்சர்களுக்கும் தெளிவு இல்லை. […]

ஐசிஐசிஐ வங்கியின் ’Pay later’ என்ற வசதியை பயன்படுத்தி நீங்கள் ரூ.20 ஆயிரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மக்கள் ஷாப்பிங் செய்வதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஒரு சிலர் நேரில் கடைக்குச் சென்றும், ஒரு சிலர் ஆன்லைன் மூலமாகவும் ஷாப்பிங் செய்து வருகின்றனர். இதற்கு ஏற்ப ஒவ்வொரு ஆன்லைன் நிறுவனங்களிலும் தள்ளுபடி, சிறப்பு விற்பனை போன்ற சலுகைகள் தொடங்கியுள்ளது. இதனை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். […]

தேர்வே இல்லாமல் மாதம் ரூ.20,000 சம்பளத்தில் மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்பைசஸ் போர்டு (Spices Board) தர மதிப்பீட்டு ஆய்வகத்தில் காலியாகவுள்ள நுண்ணுயிரியல் பயிற்சி ஆய்வாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என தேர்வு எதுவும் நடத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரம்… நிறுவனம்: ஸ்பைசஸ் போர்டு பணியின் பெயர்: பயிற்சி ஆய்வாளர் […]

அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களில் வாழ்நாள் சான்றிதழை எப்போது புதுப்பிக்க வேண்டும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசு ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் தேதி தளர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை புதிய தகவலை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30, 2022 ஓய்வூதியம் பெறும் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1க்கு பதில் அக்டோபர் 1ல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மிகவும் […]

திடீர் உடல் நலக்குறைவால் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு . அவருக்கு தற்போது 97 வயதாகின்றது. நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நேற்று மாலை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்பேரில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து […]

தூய்மையான நகரத்திற்கான பட்டியலில் மீண்டும் தொடர்ந்து 6 வது ஆண்டாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பா.ஜ.க. ஆட்சி தொடங்கியதில் இருந்து ஸ்வச் பாரத் என்ற பெயரில் தூய்மையான இந்தியா உருவாக்கப்பட்டு வருகின்றது.இதனால் முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்கள் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றார். அதன்படி தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. ஸ்வஸ் சர்வேக்‌ஷான் என்ற பெயரில் தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து விருதுகள் […]

புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவுத் தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள காமராஜர் சிலைக்கு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். அப்போது, மனித சங்கிலி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிர்ப்பு […]

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகின் 60 ஆண்டுகால கனவை, இயக்குநர் மணிரத்னம் சாத்தியமாக்கியிருக்கிறார். 5 பாகங்கள் கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, அதுவும் 150 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படம், கோலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது 2 நாட்களில் உலக […]

புதுச்சேரியில் நடத்தையில் சந்தேகத்தால் 2-வது மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் வினோபா நகர் பொய்யாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது 38). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில், 2-வது மனைவி லட்சுமி என்ற வள்ளியம்மை (32). இவர் கொக்கு பார்க் பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவி மேட்டுப்பாளையம் […]

வௌவால்கள் மூலம் பரவும் புதிய வகை ‘கோஸ்தா-2″வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனா வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உலகம் முழுவதும் ஸ்தம்பிக்க வைத்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டாலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், புதிய வகை கொரோனா வைரஸை அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவினர் கண்டறிந்துள்ளனர். ரஷ்ய […]