கேரள முன்னாள் உள்துறை அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் உள்துறை அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் சனிக்கிழமை இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரான பாலகிருஷ்ணன் 2015 முதல் 2022 வரை மார்க்சிஸ்ட் […]
சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற எட்டு ரெயில் நிலையங்களில் இன்று முதல் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல்,எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய எட்டு ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் இன்று முதல் அதிகரித்துள்ளது. விழாக்காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் வேலை செய்பவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் செய்வதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக சென்று வருகின்றன. நாடு முழுவதும் இருக்கும் சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் ட்ராக் முறை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 26 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதை […]
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தை பொருத்தும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயம் செய்து வருகின்றனர். வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25.50 குறைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையை குறைத்துள்ளன. அந்த வகையில் சென்னையில் […]
புதுடெல்லியின் நவாடா பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியருக்கு மனைவியும் 9 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், ஆசிரியருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால், அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரியருக்கும் அவரது மனைவிக்கும் நேற்று மாலை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஆசிரியர் அவரது மகள் கண் முன்னே மனைவியை […]
கேரளாவில், தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்குவதற்கு, முக்கிய நகரங்களில் இலவச தங்கும் மையம் அமைக்கப்பட உள்ளதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கேரளாவில் உள்ள முக்கிய நகரங்களில் “மையம் எனது கூடு” என்ற பெயரில் அரசு மையம் தொடங்கப்படும் என்றார். இந்த மையங்களில் இரவு 8 மணிக்குள் வரும் பெண்களுக்கு இலவசமாக உணவு அளிக்கப்படும் […]
அக்டோபர் 1 இன்று முதல் இந்தியாவில் பல பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை சாமானிய மக்களின் நிதி நிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வாகனங்களின் விலை உயர்வு, டெல்லியில் மின்சார மானியம், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள், அடல் பென்ஷன் திட்டம், மேலும் மியூச்சுவல் ஃபண்டுகளின் விதிகள் என்று பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் முக்கியமாக 10 மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் […]
தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான்தான் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவே யார் தாஜ்மஹாலை கட்டியது என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். டெல்லி ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள அழகான காதல் சின்னம் தாஜ்மஹால். ஷாஜகான் என்ற மன்னர் தனது மனைவி மும்தாஜ் மீது வைத்திருந்த அளவுகடந்த காதலால் தாஜ்மஹாலை கட்டியதாக நாம் படித்து வருகின்றோம். இந்நிலையில் ஷாஜகான்தான் தாஜ்மஹாலை கட்டினார் என்பதற்கான ஆதாரம் அறிவியல் […]
பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெட்ட வேண்டாம் , தைக்க வேண்டாம் அப்படியே ஸ்ப்ரே பண்ணா போதும் .. இது பற்றிய தகவலை பார்க்கலாம்.. பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பலர் பங்கேற்று வித்தியாசமான ஆடைகளை மாடல் அழகிகளுக்கு அணிவித்து அணிவகுத்தனர். அப்போது பெல்லா ஹடிட் என்ற பிரபலமான மாடல் அழகி ஒருவர் எந்த ஆடையும் அணியாமல் […]
சென்னை ஏர்போர்ட்டில் தூய்மைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாலியின் கிளினிங் மாப் கைப்பிடிக்குள் சுமார் இரண்டு கிலோ தங்க பசை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்த தொழிலாலியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் தூய்மைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாலியின் கிளினிங் மாப்பை பார்த்து சந்தேகமடைந்த சி.ஐ.எஸ்.எப் வீரர் ஒருவர், மாப்பின் கைப்பிடிக்குழாயை கழட்டி காட்ட சொல்லி சோதனை செய்துள்ளார். அப்போது அந்த கைப்பிடிக்குழாய்க்குள் 78 லட்சம் மதிப்புள்ள […]