மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மியான்மரில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் நாட்டை கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு மக்கள் வதைக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அங்கு ஏராளமான இந்தியர்களும் வதைக்கப்படுவதாக மியான்மரில் வசிக்கும் இந்தியர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. […]

மதுரை தொழிலதிபரின் வீட்டில் 95 சவரன் நகை மற்றும் 45 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேலூர் குமரன் நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் . இவர் வீட்டிலில்லாத போது ஜன்னலை உடைத்து உள்ளே வந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து 95 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் 45 கிலோ வெள்ளியையும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் […]

தன்னை விட்டு பிரிந்து 2-வது திருமணம் செய்த கணவரை அவரது முதல் மனைவி மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா (28). இவருக்கும் ஸ்ரீகாந்த் (33) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அகிலாவின் பெற்றோர் ஸ்ரீகாந்துக்கு வரதட்சணையாக ரூ.20 லட்சம் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு […]

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ராஜஸ்தான் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முக்கியமான தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், முக்கிய முடிவாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் […]

அரசு கஜானா கொள்ளையடிக்கப்படுவதாக கேரள ஆளுநர் புகார் எழுப்பும் நிலையில் நாளை இதற்கான ஆவணங்கள் வெளியிடப்படும என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்… கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் மலையாளம் துறை இணை பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரியா வர்கீஸ் என்பவரும் உள்ளார். அவர் முதல்வர் பினராயி விஜயனின் தனி செயலாளர் கே.கே.ராகேஷ் என்பவரின் மனைவி. தேர்வு நடந்தபோது பிரியா வர்கீஸ் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருந்துள்ளது. இருப்பினும் தரவரிசைப் பட்டியலில் அவர் […]

சர்வதேசப் பொருளாதாரம் 1970-ஆம் ஆண்டுக்கு பிறகு மந்த நிலையை நோக்கி செல்வதாகவும், தற்போதே அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டதாகவும் உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. இதனால், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கம் குறையும் என இந்த நாடுகள் […]

தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் தீவிரவாத செயலுக்கு பயிற்சி முகாம் நடத்துவதாகவும், மத ரீதியில் இரு தரப்பினர் இடையே மோதலை உண்டாக்க முயற்சிபதாகவும் கடந்த மாதம் ஜூலை நான்காம் தேதி அப்துல் காதர், ஷேக் ஷகதுல்லா, முகமது இம்ரான், முகமது அப்துல் முபின் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு பிறகு தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கை மறுபதிவு செய்த […]

சீனாவில் படிகங்களால் நிரப்பப்பட்ட இரண்டு ராட்சத டைனோசர் முட்டைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் அன்ஹுய் மாகாணத்தின் கியான்ஷான் பகுதியில் பீரங்கி குண்டு அளவிலான 2 டைனோசர் முட்டைகள் கிடைத்துள்ளன. இதுகுறித்த தகவல்கள் பழங்கால புவியியல் இதழில் வெளியாகியுள்ளன. இவை டைனோசர்கள் காலத்தின் இறுதிக் காலமான கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்த முட்டைகள் என்பது தெரியவந்துள்ளது. அந்த முட்டைகள் இரண்டும் கிட்டத்தட்ட முழுமையான கோளவடிவிலேயே இருக்கின்றன. முட்டைகளின் அளவு, ஓடுகளின் இறுக்கமான அமைப்பு […]

உத்தரபிரதேச மாநில காவல்துறையை சீரமைக்கும் திட்டத்தின் கீழ் 56 மாவட்டங்களுக்கு நவீன சிறை வாகனங்களை அறிமுகப்படுத்தும் விழாவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேசத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு நிலவரம் நாட்டிற்கு மட்டுமின்றி, உலகத்திற்கே உதாரணமாக உள்ளது. 2017-ஆம் வருடத்திற்கு முன்பு வன்முறை, அராஜகம் மற்றும் போக்கிரித்தனம் பற்றி விவாதிக்க மக்கள் உத்தரபிரதேசத்தை உதாரணமாக பார்த்தனர். ஆனால், தற்போது மாநிலத்தில் சட்டம் […]

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிப்பை தொடர அவர்களுக்கு மருத்துவ சீட்டு வழங்கப்பட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்….’’ வெளியுறவு கொள்கை தொடர்பான மக்களவை குழு , இவர்களுக்கு இந்தியாவில் மருத்துவப்படிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என பரிந்துரைத்திருந்த நிலையில் மத்திய அரசின் நிலைப்பாடு மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது… அரசு […]