கோவையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ தற்போது நிலவி வரும்‌ சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில்‌ கொண்டு, காவல்துறையுடன்‌ இணைந்து சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கினை கண்காணிக்கவும்‌ பாதிப்புகள்‌ ஏதும்‌ ஏற்படா வண்ணம்‌ அனைத்து முன்னேற்பாடுகளும்‌ […]

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இன்று தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ கட்டுபடுத்திட தமிழக முதல்வர்‌ ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்‌” நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகள்‌ எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி என்ற நோக்கில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா […]

உலக சுகாதார அமைப்பின்படி குரங்கு அம்மை என்பது சர்வதேச அளவில் உலகளாவிய பொது சுகாதார அவரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட கவலைப்படக்கூடிய ஒரு நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறியிருப்பதைப்போல் 78 நாடுகளில் இது கண்டறியப்பட்டது. இந்த குரங்கு அம்மை , நோய்த்தாக்குதலுக்குள்ளான நபரின் உடையை, ஆடையை அல்லது அவரது படுக்கையை , கைத்துடைக்கும் துண்டு ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலமாகவோ தொடுவதன் மூலமாகவோ பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு […]

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு , புதுவை, காரைக்கால்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’’ 24.9.2022 முதல் 26.9.2022 வரை தமிழ்நாடு […]

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிதிரைக்கு வர இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் . இதில் , விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி , சரத்குமார், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். ’’பொன்னியின் செல்வன்’’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆதித்த கரிகாலனாக […]

சென்னையில் செப்டம்பர் 26ம் தேதி முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக செப்டம்பர் 26ம் தேதி திங்கள் கிழமை மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் 26ம் தேதி காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு […]

ஆந்திராவில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் ரயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடுக்கில் சிக்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் கிட்டலூர் என்ற ரயில் நிலையத்தில்இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹுப்ளி – விஜயவாடாஇடையே விரைவு ரயிலில் கர்நாடகாவில் இருந்து ரவிக்குமார் என்ற நபர் நந்தியாலா வந்துள்ளார். இவர் ரயில்வேயில் வேலைபார்க்கும் பணியாளர் ஆவார். ரயிலில் அவர் தூங்கிவிட்டதால் தான் வந்த ரயில்லையத்தில் அவர் இறங்க முடியவில்லை இதனால் […]

உத்தரபிரதேசத்தில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற +2 மாணவன் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் சதர்பூர் என்ற பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகின்றது. இதில் தலைமைஆசிரியராக பணியாற்றி வருபவர் ராம்சிங்வர்மா . நேற்று இருமாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தலைமை ஆசிரியர் தலையிட்டு இருவரையும் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரடைந்த மாணவர் , லைசன்ஸ் இல்லா துப்பாக்கியை சட்டத்திற்கு புறம்பாக பள்ளிக்கு எடுத்து […]

அருணாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஸ்கார்பியோ கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வைரலாகியுள்ளது. அருணாச்சலபிரதேசத்தில் சுபன்சிரி மாவட்டத்தில் சிபுட்டா கிராமத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எப்படியாவது கடந்து சென்றுவிடலாம் என நினைத்த ஓட்டுனர் ஸ்கார்பியோ காரை ஓட்டிச்சென்றார். பாதி தூரம் சென்றதும் அந்த கார் நடுவில் சிக்கிக் கொண்டது. […]

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஆபாசவீடியோக்கள் வெளியான விவகாரத்தில் அருணாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த ராணுவீரர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் குளிக்கும் வீடியோ உள்ளிட்ட ஆபாச வீடியோ வெளியிடப்பட்டதாக கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருடைய ஆண் நண்பருக்கும் தொடர்பு இருந்ததை அடுத்து ஷிம்ளாவைச் சேர்ந்த அந்த நபர் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 4வது நபரை கைது செய்துள்ளனர். […]