கடந்த ஜூன் 13ஆம் தேதி காலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் சோதனை நடத்த தொடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில், திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, ஜூன் 14 அதிகாலை 3 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் 3 குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, […]
ஆலங்குடியில் தந்தையை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மேல சுண்ணாம்புகார தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (55). இவரது மனைவி வைரம் (50). இவர்களுக்கு சதீஷ்குமார் (31), திருநாத் (28), சோமசுந்தரம் (எ) அலெக்ஸ்(27) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில் சதீஷ்குமார் மற்றும் திருநாத் ஆகிய இருவருக்கு திருமணமான நிலையில், சோமசுந்தரம் (எ) அலெக்ஸ் திருமணமாகாமல் சென்னையில் வேலை பார்த்து […]
சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய அர்ச்சனா, தற்போது பன்முக திறமை கொண்டவராக பட்டையை கிளப்பி வருகிறார். திருமணத்திற்கு பிறகு மீடியா முன் வராமல் இருந்த அர்ச்சனா, கடந்த சில வருடங்களில் எல்லா தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக முத்திரை பதித்து விட்டார். மேலும், இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தன்னுடைய பெயரை கொஞ்சம் கெடுத்துக் கொண்டார் என்று தான் […]
கொலை செய்வதில் யார் கில்லி என்ற தகராறில் ரவுடியை கொலை செய்து புதர்மண்டிய பாழுங்கிணற்றில் வீசிய குடிகார கூட்டாளிகளை 6 மாதம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் வடக்கு தெருவைச் சேர்ந்த குண்டாஸ் ரவுடி பாலமுருகனின் மகன் சீமான். பள்ளி படிப்பை முடித்துவிட்டு ஊதாரியாக சுற்றித்திரிந்த சீமான் மீது சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்றது உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக […]
சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க நினைத்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது. வேப்பமரம்: அவள் […]
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் மீது 5 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக லோகேஷ் என்பவர் ஜூஸ் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் லோகேஷ் மீது நாட்டு வெடிகுண்டை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துவிட்டு […]
மயிலாடுதுறை மாவட்டம் லால் பகதூர் சாஸ்திரி நகரில் அமைந்துள்ளது பழமையான பிரசித்தி பெற்ற மன்மத காருண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குடமுழுக்கு விழா செய்ய அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து திருப்பணிகள் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் திருப்பணி பணிகள் அனைத்தும் நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான தேதி குறிக்கப்பட்டு கடந்த 3ஆம் தேதி கும்பாபிஷேக விழா விக்னேஸ்வரர் பூஜையுடன் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவர் தற்போது சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். இந்த நோயால் அவர் பல கஷ்டங்களையும் அனுபவித்தார். சிகிச்சையினால் நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா, படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்நிலையில், ரசிகர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுக்கும் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி என்ற தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிலையில் பாவனி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர், என் வாழ்க்கையின் இந்த 15 நாட்களைக் கழிப்பது மிகவும் கடினமாக இருந்தது. என்னுடைய கழுத்தில் சிறிய வலியுடன் இந்த […]
கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொது தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அந்த தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், “ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பணப் […]