மத்தியப்பிரதேசத்தில் பாஜக பிரமுகரால் சிறுநீர் கழிக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் கால்களை முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கழுவி மரியாதை செலுத்தினார். மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் அமர்ந்த நிலையில் இருக்க, அவர் மீது பிரவேஷ் சுக்லா என்ற பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்து அவமதித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை கண்டித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சித்த நிலையில், அம்மாநில […]

நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1996-2001ஆம் ஆண்டுகளில் பொன்முடி அமைச்சராக இருந்தபோது அரசுக்கு சொந்தமான 3,630 சதுரஅடி நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து 2003ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அமைச்சர் பொன்முடி தனது மாமியார் பெயருக்கு பதிவு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது […]

தமிழில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சரண்யா நாக், இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004இல் வெளியான ‘காதல்’ படத்தில் சந்தியா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில், முதலில் நடிக்க தேர்வானவர். ஒரு சில காரணங்களால் சந்தியா ஹீரோயின் ஆக மாற, சரண்யா நாக் அவருக்கு தோழியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, பேராண்மை உள்ளிட்ட […]

தமிழ் சினிமாவில் பல பிரச்சனைக்கு பேர் போன ஆளாக வலம் வந்தவர் நடிகர் சிம்பு. போற இடமெல்லாம் முட்டி முட்டி மோதுகிற இடமாகவே சிம்புவிற்கு இருந்தது. இவர், தற்பொழுது கம்பேக் கொடுத்து நடித்து வருகிறார். அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் சிம்புவின் நடிப்பிற்கு தீனி போட்ட படங்களாகவே அமைந்தன. அடுத்ததாக கமல் புரொடக்ஷனில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி […]

டெல்லி மாநிலம் கிழக்கு ரோதாஷ் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது கணவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, இந்த பெண்ணை ஆபாச படம் பார்க்கும்படி தொடர்ந்து அவரது கணவர் தொல்லை கொடுத்து வருகிறாராம். அதுவும் இல்லாமல், அந்த ஆபாச பட நடிகைகள் அணியும், டிரஸ்களை போலவே, மனைவியையும் அணிய சொல்லி டார்ச்சர் செய்கிறாராம். அந்த படத்தில் உள்ளதைபோலவே, டிரஸ் செய்துகொண்டு, கணவர் முன்னாடி போய் நிற்க […]

தக்காளி விலை உயர்ந்திருக்கும் நிலையில், தக்காளி தோட்டத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளியை திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கடந்த சில தினங்களாகவே, காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை, ராக்கெட் வேகத்தில் ஏறியுள்ளது. 1 கிலோ தக்காளி 120 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. அன்றாட சமையலுக்கு தக்காளி கண்டிப்பாக தேவை என்பதால், அதிக […]

டிவி தொகுப்பாளராக இருந்து தெலுங்கில் ‘சீதா மகாலட்சுமி’ என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியவர் அர்த்தனா பினு. பின்னர், மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் ஹீரோவாக அறிமுகமான ‘முதுகவ்’ என்கிற படத்தில் மலையாளத்தில் ஹீரோயினாக நடித்தார். தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான தொண்டன் படத்தில் அறிமுகமான இவர், பின்னர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக செம்ம, நடிகர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், வெண்ணிலா கபடி குழு 2 […]

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது மாடல் நடிகர் நரேஷ் உடன் படு நெருக்கமாக திருமண தீமில் நடத்திய போட்டோஷூட் […]

திருமணம் ஆகதவர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால், அறிவித்திருக்கிறார். நாடு முழுவதுமே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. திருமணத்திற்கு பல மாநிலங்களிலும் பெண் கிடைக்காமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர். ஹரியானாவில் நிறைய இளைஞர்கள் 40 வயதைக் கடந்த நிலையிலும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தேடி வருகின்றனர். பல வருடங்களாகவே மிகக் குறைந்த பாலின விகிதம் உள்ள மாநிலமாக ஹரியானா இருந்து […]

ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து பல போட்டிகளை நடத்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் மாணவர்கள் புது ஆடை […]