ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் நேரத்தை தமிழக அரசு வீணக்கின்றது என கூறி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். போக்குவரத்து துறையில் பணியாற்றியவர் வேணுகோபால்.இவர் கடந்த 1995ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில் பல்வேறு காரணங்களைக் காட்டி ஓய்வூதியத்தை அவருக்கு போக்குவரத்து துறை வழங்கவில்லை. இதனால் தொழிலாளர் ஆணையத்தில் முறையிட தொடங்கி , உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டு அந்த உரிமையை பெற்றார். ஆனால் கடந்த 2009ம் […]

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான […]

பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:- திமுக அமைச்சர் துரைமுருகன் நேற்று ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது, பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுப்பதாக சொன்னதை சீக்கிரம் நிறைவேற்றி விடுவோம். “சில்லறை மாற்றி கொண்டிருக்கிறோம்” அம்மாவுக்கு ஆயிரம், பெண்ணுக்கும் ஆயிரம் என 2000 ரூபாய் கொடுக்கும் ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்று பேசினார், மற்றொரு திமுக அமைச்சர் பொன்முடி “ஓசி, ஓசி பஸ்சில […]

வெற்றிமாறன் தயாரித்த ’பேட்டைக்காளி’ என்ற வெப் சீரியஸ், வரும் தீபாவளி முதல் வெளியாக வாய்ப்புள்ளதாக ஆஹா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூர்யாவை வைத்து ’வாடிவாசல்’ மற்றும் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ’விடுதலை’ ஆகிய படங்களை இயக்கி வருவது நாம் அனைவரும் அறிந்தது. வாடிவாசல் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில், விடுதலை படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. கொடைக்கானலில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்ததற்கான […]

தனக்கு எதிராக பொய்யான புகார் அளித்துள்ள சினேகன்மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சினேகம் பவுண்டேஷன் விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியும், திரைப்பட பாடலாசிரியர் சினேகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் 11 லட்சம் ரூபாயை நடிகை ஜெயலட்சுமி மோசடி செய்துவிட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் மத்திய […]

இலவச பேருந்து குறித்த அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பாட்டி ஒருவர் நான் ஓசில டிக்கெட் எடுக்காம வரமாட்டேன் என சண்டைபிடிக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது. இலவசம் என்ற சொல்லுக்கும் ஓ.சி. என்ற சொல்லுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றது. என்னதான் இலவசமாக வழங்கினாலும் அதை தன்மானத்துடன் ஒப்பிட்டு ஓ.சி.ல மக்கள் பயணிக்கின்றார்கள் என்ற வார்த்தை மக்களை சற்று கடுப்பாக்கி உள்ளது. திமுகவின் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் […]

ஆலங்குடி அருகே எஸ்.களபம் கிராமத்தில் வசித்து வரும் அடைக்கலம் மகன் முருகானந்தம் (20). இவர் தனது பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூதாட்டி(65) ஒருவர் அந்த வழியாக வீட்டிற்கு காய்கறிகளை வாங்கிக்கொண்டு வந்தார். அந்த மூதாட்டி முருகானந்தத்திடம் பைக்கில் லிப்ட் கேட்டு அவருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது கும்மங்களம் அருகே வந்தபோது அங்கிருக்கும் குளக்கரையில் வைத்து முருகானந்தம் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது மூதாட்டி சத்தம் […]

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளை யாராலும் தடுக்க முடியாது என்று  பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு  காவல்துறை அனுமதியளிக்கவில்லை . இதற்கு கண்டனம் தெரிவித்து  கோவை தெற்கு பா.ஜக. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ’’ உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் […]

கனியாமூரில் கலவரத்துக்குள்ளான பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. பள்ளி கட்டிடம், பொருட்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில், […]

ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வரும் வி.ஜே. மகாலட்சுமி – ரவீந்தர் ஜோடியைப் பற்றி சில தகவல்கள் பரபரப்பரப்பாக பேசப்பட்டு வரகின்றன.உண்மையாகவும் இருக்கலாம் என்ற வகையில்தான் பேச்சு அடிபடகின்றது. வி.ஜே.மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் இருவரும் திருப்பதியில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். வரவேற்பும் அதே சமயத்தில் நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர். இவர்கள் திருமணம் பற்றி தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆயிரம் விமர்சனங்களையும் தாண்டி தினமும் செய்திகளில் இடம்பிடித்து […]