தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம் குனியமுத்தூரை அடுத்துள்ள சுகுணாபுரம் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தின் விடுதி அருகே காம்பவுண்ட் சுவர் ஒன்று உள்ளது. கருங்கல்லால் கட்டப்பட்ட இந்த சுவர் 30 அடி நீளமும், 5 அடி உயரமும் கொண்டது. இதன் அருகில் புதிய காம்பவுண்ட் சுவர் எழுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் […]

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(37) இவர் கடந்த 2016ஆம் வருடம் மே மாதம் 8ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது ஈஞ்சார் சாலையில் இவர் பயணித்துக் கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்து 1 3/4 பவுன் தங்கச் செயின், செல்போன், 130 ரூபாய் பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்தது. இது தொடர்பாக […]

திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் என்ற பகுதியில் அன்பகம் என்ற பெயரில் மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகம் கடந்த 1999 ஆம் ஆண்டு வீரமணி என்பவரால் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த காப்பகத்தில் பெண்கள் முதியோர் மனவளர்ச்சி குன்றியோர் என்று 50க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இந்த காப்பகத்தில் தங்கி இருக்கும் பெண் வருவருக்கு காப்பக […]

மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் பாபுஜி (50) இவர் சென்னை நொளம்பூர் எஸ் எம் பி கார்டன் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் பாபுஜி அந்த நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, வெங்கட்ராமனுக்கும், பாபுஜிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நடுவே வெங்கட்ராமன் தரப்பைச் சார்ந்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் […]

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(40) பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவரது மனைவி சபுராபீவி என்கின்ற நிஷா (35) இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் ஆனால் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். சதீஷ்குமார் மீது காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் சதீஷ்குமார் தன்னுடைய மனைவி […]

சென்னை வேளச்சேரி சசிநகர் பகுதியில் இருக்கின்ற ஏரியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்து இருக்கின்றனர். இதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு […]

சின்னத்திரையில் நடன இயக்குநராக வலம் வந்து கொண்டிருந்த சாண்டி, தண்ணில கண்டம், கெத்து போன்ற படங்களுக்கு நடனம் அமைத்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் நடன இயக்குனராக பணியாற்றினார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். இதற்கிடையே, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சாண்டி, நல்ல எண்டர்டெய்னராக இருந்தார். அந்த நிகழ்சியின் முடிவில் […]

விக்ரம் படத்தின் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்திய சினிமாவின் பேவரைட் இயக்குனர் ஆகிவிட்டார். விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதற்கு அதில் அவர் பயன்படுத்திய எல்.சி.யூ. கான்செப்ட் தான் காரணம். இப்படத்திற்கும் கைதி படத்திற்கும் தொடர்பு படுத்தி அவர் செய்த விஷயங்கள் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதனால், அப்படம் ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதிலும் சூர்யாவின் ரோலெக்ஸ் கேமியோ வேறலெவலில் ரீச் ஆனது. விக்ரம் […]

மதுரையில் கண்ணாடி கடையில் ஃபிரேம் ஒட்டும் வேலை பார்த்து வந்தவர் வடிவேலு. சில இடங்களில் இரவு வாட்ச்மேனாகவும் பணியாற்றியுள்ளார். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ராஜ்கிரணின் அறிமுகம் கிடைக்கவே, வடிவேலுவிடம் திறமை இருக்கிறது என கணித்து அவர் தயாரித்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் அவரை அறிமுகம் செய்தார். ஏனெனில், கவுண்டமணிக்கு மாற்றாக ஒருவரை கொண்டுவர வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருந்தது. ஒல்லியான தேகம், பாடும் திறமை, வித்தியாசமான உடல்மொழி […]

தமிழகத்தை பொறுத்தவரையில் பள்ளி வயது குழந்தைகள் அனைவருக்கும் நிச்சயமாக கல்வி அறிவு கிடைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக பல நல்ல திட்டங்களையும், முயற்சிகளையும் பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தமிழகத்தில் எழுந்த படிக்க தெரியாத பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 3 மாத காலம் சிறப்பு பயிற்சி வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறை ஒரு புதிய உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. […]