கட்டுமான பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்த வழிவகை செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள சுமார்‌ 2000 கல்குவாரிகள்‌ மற்றும்‌ சுமார்‌3500 கிரஷர்‌ யூனிட்டுகளில்‌ ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்‌பணிபுரிந்து வருகின்றனர்‌. தமிழகத்தின்‌ அத்தனை மாவட்டங்களிலும்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ கட்டுமானப்‌ பணிகள்‌, மெட்ரோ ரயில்‌ பணிகள்‌ மற்றும்‌ அரசுத்‌ திட்டங்களுக்கு, எம்‌.சாண்ட்‌ மற்றும்‌ ஜல்லி கற்கள்‌ வினியோகம்‌, […]

தக்காளி விலை கடந்த சில தினங்களாக உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில், சில்லரைக்கு ஒரு கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. […]

டேட்டா ஸ்கிராப்பிங், தகவல் ஆளுகைக்காக பயனர்களுக்கு தற்காலிக வரம்புகளை நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் (Verified Accounts) ஒரு நாளைக்கு 10,000 பதிவுகளையும், பிற பயனர்கள் 1000 பதிவுகளையும், புதிய பயனர்கள் 500 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற தரவுகளை ஒழிப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். முதலில், சரிபார்க்கப்பட்ட கணக்கு […]

தமிழ்நாடு அரசின்‌ ஓய்வூதியதார்களுக்கு நேர்காணல்‌ செய்து கொள்ள புதிய வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின்‌ வசதிக்காக புதிய அறிவிப்பாணைப்படி, சேலம்‌ மாவட்ட கருவூல அலகில்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ குடிமை ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ ஓய்வூதியம்‌ பெறுபவர்கள்‌, தாங்கள்‌ ஓய்வு பெற்ற மாதம்‌ மற்றும்‌ இந்த மாதத்திற்குள்‌ நேர்காணல்‌ செய்திட வேண்டும்‌. குடிமை குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌, ஆசிரியர்‌ குடும்பஓய்வூதியதாரர்கள்‌ அனைவரும்‌ தங்கள்‌ […]

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி முதல் அணியாக இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில், 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 2 அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அணியாக வெஸ்ட் இண்டீஸ் முதல்முறையாக உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெறாமல் வெளியேறியது. இலங்கை அணி சூப்பர் […]

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் 43 ரன்கள் வித்யாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித்(110) சதமடித்து அசத்தினார். ராபின்சன் மற்றும் ஜோஷ் டாங் பந்துவீச்சில் 3 விக்கெட்களை வீழ்த்தினர். அதன்பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியால் […]

நடிகை ராதிகா, சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது ஒரு ரசிகை செய்த செயல் அவரை கடுப்பாக்கியது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் ராதிகா. பிரபல வில்லன் நடிகர் ராதாரவியின் தங்கை இவர். வெளிநாட்டிற்கு சென்று படித்துவிட்டு திரும்பிய இவர், 1978இல் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படம் மூலம் அறிமுகமானார். பின்னர், இவரைத்தேடி பட […]

நோய் தொற்றுகளில் இருந்து நம்மை எப்போதும் பாதுகாத்துக் கொள்ள தனிப்பட்ட சுகாதாரத்தை கவனித்துக்கொள்வது மிக அவசியம். அந்த விஷயத்தில் குளிப்பதற்கு பயன்படுத்தும் டவல்களை மறந்து விடுகிறோம். நாம் தினமும் குளிக்கும்போது, உடலைத் துடைத்து உலர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் துணி அடிக்கடி துவைக்கப்படுவதில்லை. டவல்களில் நாம் பார்க்க முடியாத பல்வேறு நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இது நீண்ட காலத்திற்கு தொற்றுநோய்களை ஏற்படுத்தும். எனவே, அவற்றை அடிக்கடி துவைப்பது மிகவும் முக்கியமாகும். பொதுவாக குளிக்க பயன்படுத்தும் […]

காலையில் நமது நாளை துவங்கவும், மதிய வேளையில் நமக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், மாலையில் நாம் இழந்த ஆற்றலை மீட்டெடுக்கவும் பலருக்கும் காபி தேவைப்படுகிறது. காபி குடித்தால் தான் வேலையே ஓடும் என்ற அளவுக்கு பலரது மனநிலை இருக்கிறது. அந்த அளவுக்கு பலர் காபி மீது அதிக பிரியத்தை கொண்டுள்ளனர். காபி குடிப்பது அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது. நமது மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் ஆயுளை அதிகரிக்க உதவுகிறது. எனினும், […]

மதுவுக்கு அடிமையாகி கொடுமைப்படுத்திய கணவரை உறவினர்களுடன் துணையுடன் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே வாசன் வேலி பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (40). இவர் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். இவர், மதுவுக்கு அடிமையாகி தினசரி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். தனது மனைவி தனலட்சுமியை குடிபோதையில் கொடுமைப்படுத்திய நிலையில், பலமுறை தனலட்சுமிக்கு ஆதரவாக அவர்களது உறவினர்களும் சிவலிங்கத்துடன் அவ்வப்போது வாக்குவாதத்தில் […]