டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது மது அருந்துவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், விற்பனையாளர் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கடந்த வாரம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை நடப்பதாக பல புகார்கள் வந்துள்ளன. சமீபத்திய புகார்களை […]
மக்கள் பாதிப்படையவேண்டும் என்ற நோக்கில் கோவிட் 19 என்ற உயிர் ஆயுதத்தை சீனா வேண்டுமென்றே உருவாக்கியதாக வூகான் ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார். சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. ஏராளமான மக்களை பாதித்து உயிர்களை பறித்த அந்த வைரஸ் இந்தியா உட்பட மற்ற உலக நாடுகளையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது.சீனாவில் முதன்முதலில் இந்த கொரோனா வைரஸ் […]
ஊபர் மூலம் 800-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்காவுக்கு கடத்தியதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த 49 வயது நபருக்கு 45 மாத சிறை தண்டனை விதித்து அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜஸ்பால் கில் என்றழைக்கப்படும் ராஜிந்தர் பால் சிங் (Rajinder Pal Singh) பிப்ரவரியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் நூற்றுக்கணக்கான இந்திய நாட்டினரை கடத்துவதற்காக கடத்தல் கும்பலின் முக்கிய உறுப்பினராக 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெற்றதாக ஒப்புக்கொண்டார், என […]
குரான், பைபிள் பற்றி ஓர் ஆவணப் படம் எடுத்துப் பாருங்கள்; அதன்பின் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும் என ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு தடைக்கோரிய வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இராமாயண காவியத்தை மையமாக வைத்து ‘ஆதி புருஷ்’ என்கிற திரைப்படம் கடந்த ஜூன் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஓம்ராவத் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் கிருத்தி சனோன், சையீப் அலி கான், சன்னி சிங் […]
பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு.. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம். உத்தரப்பிரதேச மாநிலம் பிம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வயிற்று. பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டிவிட்டர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. குற்றம் இழைத்தவர்கள் குறித்து விசாரித்து […]
பிங்க் வாட்ஸ்அப்பை டவுன்லோட் செய்ய வேண்டாம். எனவும் டவுன்லோட் செய்வதற்கான லிங்க்-ஐ கூட கிளிக் செய்ய வேண்டாமென்றும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிங்க் நிற whatsapp செயலி மக்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது whatsapp செயலியில் பிங்க் நிற வாட்ஸ் அப்பை பதிவிறக்கம் செய்ய என்ற லிங்கை அனுப்பப்படுகிறது. அதனை கிளிக் செய்யும்போது பயனரின் […]
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் காவல்துறையின் அடுத்த தலைவர் பட்டியலில் இருக்கும் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு உள்ளது. சென்னை மாநகராட்சியின் காவல்துறை ஆணையராக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அந்த பதவிக்கு நியமனம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. 1992 ஐபிஎஸ் அதிகாரிகளின் பிரிவை சேர்ந்த ரத்தோர், கடந்த மாதம் டிஜிபி-யாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு முதல் ஆவடி நகர போலீஸ் […]
இன்ஸ்டாகிராமில் உள்ளது போல ஸ்டோரிகளை பதிவிடும் அம்சத்தை டெலிகிராம் விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செய்திகளை பரிமாறிக்கொள்ளும் செயலிகளான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களை ஈர்க்க புதுப்புது அம்சங்களை வெளியிட்டு வருகிறது. இவற்றிக்கு போட்டியாக டெலிகிராமும் அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலிகளில் உள்ள அம்சங்களில் சில டெலிகிராமில் ஏற்கனவே உள்ளன. தற்பொழுது, டெலிகிராம் ஆனது பயனர்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக, ஒரு அட்டகாசமான அம்சத்தை […]
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்ததாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுடன் விளையாடும் போட்டிகள் ஜூலை 12இல் தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் 18 இல் அயர்லாந்துக்கு எதிரான 3 […]
புற்றுநோயை எளிதில் குணப்படுத்தும் வகையில் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.பல தசாப்தங்களாக வரையறுக்கப்பட்ட வெற்றிக்குப் பிறகு, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்றுநோய் மையம், புற்றுநோய்க்கு தடுப்பூசிகள் உட்பட பிற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இந்த நிறுவனம் தடுப்பூசிக்கான ஆராய்ச்சி பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசி குறித்து டாக்டர் […]