தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை ஆளுநருக்கு பதில் முதலமைச்சரே நியமிக்க் வகை சட்டத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.. இந்த உத்தரவை எதிர்த்தும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பு […]
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகின்றன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) டி.டி.வி. தினகரன் இணைந்தது ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது. இந்த இணைப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “சசிகலாவும் எங்களது கூட்டணிக்குத் தனது ஆதரவை வழங்குவார்” என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார். தினகரனின் இந்த கருத்து, அதிமுகவில் […]
தமிழ்நாட்டில் வீடற்ற ஏழை, எளிய மக்களின் நீண்டகால கனவை நனவாக்கும் வகையில், அரசுக்கு சொந்தமான ஆட்சேபனையற்ற நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. விளிம்புநிலை மக்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதையும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிலையான இருப்பிடத்தை அமைத்துக் கொடுப்பதையும் இலக்காக கொண்டு வருவாய்த் துறை மூலம் இந்த நில ஒதுக்கீடு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தகுதியான நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குச் […]
வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இளம் வயதிலேயே மக்கள் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் திடீரென நின்றுபோவதாகும். இதயம் ஆரோக்கியமாக இல்லாவிட்டாலும், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், நீரிழிவு, புகைப்பிடித்தல் மற்றும் அதிக எடை ஆகியவை பக்கவாதத்திற்கு முக்கிய காரணங்களாக […]
உலகில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள் கொண்ட நாடாக வடகொரியா உள்ளது.. கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி அந்நாட்டில் நடந்து வருகிறது.. வட கொரியாவில் மக்கள் இணையத்தைப் பயன்படுத்த முடியாது, வெளியுலகத் தொடர்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. வட கொரிய மக்கள் அரசு ஊடகங்களை மட்டுமே பார்க்க முடியும். குடிமக்கள் நாட்டிற்குள் செல்லவும் வெளியேறவும் கடுமையான அனுமதி பெற வேண்டும், வெளிநாடு செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சிகை […]
டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை பொதுவானதாகிவிட்ட போதிலும், ரொக்கம் என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு இன்றியமையாத பகுதியாகவே நீடிக்கிறது. நாம் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் வழக்கமாகப் பயன்படுத்துகிறோம். இருப்பினும், இந்த நோட்டுகளில் ஒரு தெளிவான நோக்கத்துடன் சிறப்பு அடையாளக் குறிகள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாது. பெரும்பாலான மக்கள் அவற்றில் அச்சிடப்பட்டிருக்கும் சின்னங்கள், கோடுகள் மற்றும் வடிவங்களை அரிதாகவே […]
இன்று பங்குச் சந்தைகளும் எஸ்ஐபி திட்டங்களும் பிரபலமாக இருந்தாலும், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் முதலீட்டாளர்களை தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. அத்தகைய நம்பகமான திட்டங்களில் ஒன்று தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) ஆகும். தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) என்பது இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்படும், அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும். பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்தை விரும்புபவர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. […]
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு (SIR) எதிராக தான் தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞரான மம்தா, தனது வாதங்களை தானே முன்வைத்தார்.. இந்தத் திருத்தப் பணி தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், இது வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் செயல்முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயம் இல்லை […]
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மணினகரில் உள்ள துர்கா பள்ளியில், 6-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது வகுப்புத் தோழனின் தண்ணீர் பாட்டிலில் நாப்தலீன் உருண்டைகளைப் போட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 23-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.. விஷம் கலந்த நீரை அருந்திய மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான், அவனது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரே பெஞ்சில் அமர்ந்திருந்த இரண்டு மாணவர்களுக்கு இடையே ஒரு சிறிய விஷயத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டதாகத் […]
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளுக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டது. மஜல்தா பகுதியைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் முற்றுகையை இறுக்கியபோது, இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஜப்பார் மற்றும் மாவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை இன்னும் நடைபெற்று வருவதால், சம்பவ இடத்தில் இருந்து பலத்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் […]

