டிஎன்பிஎஸ்சி உதவி செயலர் பிரிவில் 59 காலியிடங்கள் இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த மே மாதத்துடன் அதற்கான காலகடு முடிவடைந்த நிலையில், வருகின்ற ஜூலை மாதம் 1ம் தேதி இதற்கான தேர்வு நடைபெற இருக்கிறது. தற்சமயம் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அந்த ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் […]

சென்னை மாநகராட்சியில் கடந்த 2022-23 நிதியாண்டுக்கான சொத்து வரியை மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு, வரித்தொகை மீது மாதத்துக்கு ஒரு சதவீதம் தனிவட்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரமான சென்னையில் தான் ஆறில் ஒரு பங்கு மக்கள் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சிக்குள்ளேயே ஒரு கோடிக்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர். மிக […]

தமிழ் சினிமாவில் ‘பேட்ட’ திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகியவர் தான் மாளவிகா மோகனன். இதனைத் தொடர்ந்து கதாநாயகியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக அவர் சிலம்பம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்று இருக்கிறார். மேலும், தங்கலான் ரோலுக்காக அதிகம் நேரம் மேக்கப் போட்டு அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், […]

தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் 1078 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்சமயம் பேருந்து கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது பயணத்திற்கான பயணச்சீட்டை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக பதிவு செய்யும்போது திரும்பி வருவதற்கான பயண சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படும். […]

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பச்சை மிளகாய் தற்போது கிலோ ரூ.60 முதல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய தக்காளி வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. உதாரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு வெளி மாநிலங்களில் இருந்து 1,200 டன் தக்காளி வரவேண்டும். ஆனால், வெறும் […]

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிபுா தாலுகா திருமலாப்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி சவிதா. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனியாக வசித்து வந்தனர். இதற்கிடையே, சீனிவாஸ், மனைவி சவிதாவிடம் விவாகரத்து கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், குடும்ப சொத்து விவகாரம் […]

நாடு முழுவதும் இருக்கின்ற அனைத்து மாநிலங்களிலும் பருத்திப்பதுக்கலை தடுக்கும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளிட்டவற்றின் கொள்முதல் நாட்டில் குறைந்திருப்பதால் அதன் விலை அதிகரித்து இருக்கிறது. இத்தகைய நிலையில் தான் மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு எளிதாக பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களில் இருக்கும் இருப்பு நிலையை கண்காணித்து பருப்பு பதுக்கலை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Quality Engineer – Supplier Quality Assurance பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் Engineering கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 5 வருடம் வரை அனுபவம் […]

மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது இனிவரும் காலங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதலாக பணம் வாங்க கூடாது அப்படி வாங்கினால் அவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கினால் பில் வழங்கும் விதத்தில் மிக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக […]

பொதுமக்கள் எப்போதும் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கிறார்கள். இதில் பயண கட்டணமும் குறைவு, பயண நேரமும் குறைவு என்பதால் அதிகம் ரயில் பயணத்தையே மக்கள் விரும்புகிறார்கள். ஆகவே ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் வைத்து தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில் பெரும்பாலான முக்கிய தினங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் தமிழகத்தில் வரும் 29ஆம் […]