கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ், ஜம்ஷிர் அலி, ஜித்தின் ஜாய் ஆகிய நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதேபோல் அரசு தரப்பு வழக்கறிஞர்களான ஷாஜகான் கனகராஜ் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்களான விஜயன், முனிரத்தினம் ஆகியோரும் ஆஜராகினர். இவ்வழக்கினை தற்போது விசாரணை செய்து வரும் […]

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் அப்துல் வகாப், கடையநல்லூர் நகராட்சி 6வது வார்டு திமுக கவுன்சிலரான இவர் தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் காரில் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் துபாயில் வேலை பார்த்து வரும் கடையநல்லூரை சேர்ந்த ஷேக் உதுமான் என்பவரிடம் வீட்டுமனை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து கவுன்சிலர் அப்துல் வகாப் […]

இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. 16 பேர் கொண்ட டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகத் தொடர்கிறார். துணை கேப்டனாக அஜிங்க்ய ரஹானே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் பேட்ஸ்மேன்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், மீண்டும் ஒரு முறை சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் இருந்து […]

திருவண்ணாமலை மாவட்டம் மோத்தக்கல் கிராமத்தில் சாதிய பாகுபாடு நிலவுகிறது வன்கொடுமை சாதி பிரச்னை எங்க ஊர்ல இருந்துக்கிட்டுதான் இருக்கு. முடிதிருத்தம் செய்றது கிடையாது. டீ கடையில உள்ள போயி ஒக்காந்து டீ குடிக்கிற பழக்கமில்ல. ஓட்டல் கடையிலேயும் அதே மாதிரிதான். மளிகை கடையில எந்த பொருளும் கொடுக்காம கொஞ்சநாள் தடைபடுத்தி வெச்சிருந்தாங்க. என்னோட பையன் நான்காம் வகுப்பு படிக்கிறான். டெய்லர் கடைல போயி அவனோட துணியை கொடுத்துட்டு வான்னு சொன்னேன். அவன் […]

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக ஆர். மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் திண்டுக்கல் ஆர்.எம்.காலணியில் இருக்கின்ற அவருடைய வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் அவருடைய வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அவர் கடந்த 2020- 21 ஆம் வருடத்தில் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக பணியாற்றினார் அப்பொழுது நோய் தொற்று […]

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் விதமாக கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மிக எளிதாக போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். சிவகாசி புறநகர் பகுதியில் மாணவர்கள் […]

புதுவை எல்லை பகுதியான கிருகம்பாக்கம் அடுத்துள்ள கடலூர் புதுச்சேரி ரோட்டில் முள்ளோடை நுழைவாயில் பகுதியில், ஸ்ருதி என்ற தனியார் பார் மற்றும் ரெஸ்டாரன்ட் இயங்கி வருகிறது. இந்த ரெஸ்டாரண்டுக்கு கிருகம்பாக்கத்தை சேர்ந்த 2 கூலி தொழிலாளிகள் மது குடிப்பதற்காக வந்து உள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு பலகையில் இரண்டு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் என்று எழுதியிருந்தது. இதற்கு ஆசைப்பட்ட அந்த கூலி தொழிலாளிகள் 3 […]

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (25) என்ற இளைஞருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் அந்த இளைஞர் தனது திருமணமானதை மறைத்து 17 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை தெரிவித்து வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தான் தன்னுடைய மகளை காணவில்லை என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் […]

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து 32 வயது பெண் ஒருவரும், அவருடன் 22 வயது வாலிபர் ஒருவரும் சூரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் மாநிலத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த பெட்டியில் 60 பயணிகள் வரையில் இருந்தனர். இந்த நிலையில் தான் குவாலியரை கடந்து ரயில் சென்று கொண்டிருந்தபோது 5 வாலிபர்கள் அந்த பெண்ணை தங்களுடைய செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். ஆனால் இதற்கு அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் […]

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் படேல் என்பவர் சனா என்ற பெண்ணை கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த தம்பதிகளுக்குள் திருமணம் ஆகி ஒரு வருட காலம் வாழ்க்கையானது சமூகமாகவே சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் சனாவின் கணவர் ஹேமந்த் தன்னிடம் […]