சென்னையை அடுத்துள்ள பெருங்குடி ஏரிக்கரை தெருவில் வசிப்பவர் விஜயகாந்த்(37) கட்டிட தொழிலாளியான இவருடைய மனைவி ரேணுகா ரேணுகாவின் உறவினரான தர்மபுரியை சேர்ந்த ராஜீவ் காந்தி (32) என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்தார் இவர் ரேணுகாவின் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி வேலைக்கு சென்ற ராஜீவ் காந்தி வெகு நேரம் ஆன பின்னரும் வீடு திரும்பவில்லை. […]

அனல் மற்றும் அனல் காற்றால் ஏற்படக் கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநிலங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார். காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரப்பிரதேசம், சத்தீஷ்கர், தெலங்கானா மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள், பேரிடர் மேலாண்மை அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கடும் வெப்ப அலையின் நிலையைக் […]

மதுரையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் இவருடன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் நண்பராக பழகி வந்தார். இந்த நிலையில், கடந்த 2021 ஆம் வருடம் செல்வம் திடீரென்று மாயமானார் அவர் காணாமல் போனது தொடர்பாக அவருடைய மனைவி முருக லட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருந்தார். அவருடைய புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செந்திலை தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் […]

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சமீனா(23) என்ற இளம்பெண் மீது ஏற்பட்ட திருட்டு சந்தேகத்தால் அவருடைய உறவினர்களே அவரை கொடூரமான முறையில் கொலை செய்திருப்பது காசியாபாத் சித்தார்த் விஹார் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 23 வயதான சமீனா கடந்த திங்கள் கிழமை காசியாபாத் சித்தார்த் விகாரில் இருக்கின்ற தன்னுடைய உறவினர்களான ஹீனா மற்றும் ரமேஷ் உள்ளிட்டோரின் மகனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுக் கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த […]

பீகார் தலைநகர் பாட்னாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தனி விமானத்தில் செல்ல உள்ளார். வரும்‌ 2024 ஆம்‌ ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்‌ நடைபெற உள்ள நிலையில்‌ மீண்டும்‌ ஆட்சியை கைப்பற்ற பாஜக அனைத்து திட்டங்களையும் தீட்டி வருகிறது. பாஜகவை எதிர்க்க வலுவான எதிர் அணியை உருவாக்கும்‌ நோக்கில்‌ எதிர்க்கட்சிகள்‌ ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக பேசி வருகின்றனர்‌. இதுதொடர்பாக பிகார்‌ முதல்வர்‌ நிதிஷ்குமார்‌ பல்வேறு மாநில […]

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில்‌ 1முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை 2023-2024 ஆம்‌ ஆண்டு மாணக்கர்கள்‌ சேர்க்கைநடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப்‌பள்ளியானது தருமபுரி செவித்திறன்‌ குறையுடையோருக்கான அரசுமேல்நிலைபள்ளி வளாகத்தில்‌ செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியானது 1 முதல்‌ 5ம் வகுப்பு வரை […]

இந்தியா – பாகிஸ்தான்‌ கால்பந்து போட்டியில்‌ இரு அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் மைதானத்தில் பரபரப்பு நிலவியது. பெங்களூருவில் இன்று தொடங்கிய இந்த தொடர் ஜூலை 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்‌ தொடரில்‌ இந்தியா -பாகிஸ்தான்‌ மோதிய போட்டியில்‌ வீரர்கள்‌ மைதானத்தில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. பாகிஸ்தான்‌ வீரரிடம்‌ இருந்த பந்தை, இந்திய அணி மேலாளர்‌ பிடுங்கவே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் […]

நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஆங்காங்கே கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளன. பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு இதோ! நடிகர் விஜய்யின் பிறந்தநாள் நாளை (ஜூன் 22) கொண்டாடப்பட உள்ளது. அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும், கோலிவுட் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றன. இருப்பினும் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தற்போதே களைகட்டத் தொடங்கிவிட்டன என்று தான் சொல்ல வேண்டும். விஜய்யின் […]

வட தமிழக கபகுதிகளின்‌ மேல்‌, கிழக்கு திசை காற்றும்‌ மேற்கு திசைகாற்றும்‌ சந்திக்கும்‌ பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதேபோல நாளை முதல்‌ 25-ம்‌ தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை […]

200 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடிய முதல்வீரர் என்ற கின்னஸ் வரலாற்று சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஐஸ்லாந்துக்கு எதிரான UEFA யூரோ 2024 தகுதிச் சுற்று ஆட்டத்தில் பங்கேற்றதன் மூலம் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். 38 வயதான ரொனால்டோ இந்த போட்டியில் 89வது நிமிடத்தில் அடித்த ஒரு கோல் மூலம் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. […]