தற்போதைய காலக்கட்டத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு சிறிய நகரத்திலும் ஒரு பள்ளியைக் காணலாம். இந்தியாவில் பத்து மாணவர்களுடன் இயங்கும் பல பள்ளிகள் உள்ளன. ஒரு பள்ளி கூட இல்லாத ஒரு நாடு இருக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரபலமான நாடு என்பதில் ஆச்சரியமில்லை. அதுதான் உலகின் மிகச்சிறிய நாடான வாடிகன் சிட்டி, கிறிஸ்தவ மதத்தின் தலைவரான போப்பின் வசிப்பிடம். இவ்வளவு புகழ்பெற்ற நாட்டில் […]

டெல்லி உயர்நீதிமன்றம் பெற்றோர் பொறுப்பை வலியுறுத்தும் வகையில் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. தாய் அதிகமாக சம்பாதிக்கிறார் என்பதற்காக மட்டும், தந்தை தனது குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா இந்த தீர்ப்பை வழங்கினார். கீழ்நீதிமன்றம் விதித்த இடைக்கால பராமரிப்பு உத்தரவை எதிர்த்து ஒரு தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மூன்று சிறுவயது குழந்தைகளுக்காக மாதம் […]

இதய நோய் என்பது இந்த நாட்களில் பெரும்பாலான மக்களை பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். இளம் வயதினர்கூட திடீர் மாரடைப்பால் சரிந்து விழுகின்றனர். உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தீவிர உடற்பயிற்சிகளோ அல்லது கடுமையான உணவுக்கட்டுப்பாடுகளோ தேவையில்லை. தினமும் கடைப்பிடிக்கப்படும் சிறிய பழக்கவழக்கங்களும் பல நன்மைகளைத் தருகின்றன. புத்தாண்டு அன்று ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்ற நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? அப்படியானால், 2026-ல் நீங்கள் தினமும் பின்பற்றக்கூடிய 5 இதயப் பராமரிப்பு குறிப்புகளை […]

சீனாவிலிருந்து இந்தியாவிற்கு அதிக அளவில், குறைந்த விலையில் எஃகு (Steel) பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால், உள்ளூர் எஃகு தொழில்துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி வந்த நிலையில், இந்திய அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சில குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீது 3 ஆண்டுகளுக்கு இறக்குமதி சுங்கவரி விதிக்கப்படுகிறது. இந்த சுங்கவரி முதல் ஆண்டில் 12 சதவீதமாக இருக்கும். இரண்டாம் ஆண்டில் இது 11.5 சதவீதமாக […]

உத்தரகாண்ட் மாநிலம் பிபல்கோட்டியில் உள்ள தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டுக் கழகத்தின் (THDC) திட்டப் பகுதியில் சுரங்கப்பாதைக்குள் இரண்டு லோகோ ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 70 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு, பணி மாற்றத்தின் போது நடந்தது. இரண்டு ரயில்களிலும் சுமார் 108 தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஒரு ரயில் மற்றொரு ரயிலின் மீது பின்னால் இருந்து மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]