fbpx

டி20 உலகக் கோப்பை தொடர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் என 3 தொடர்களுக்கான இந்திய அணி பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி ஆசிய கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்களில் […]

தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் இணைய சேவை வழங்குநர்களுக்கு பொருந்தும் வகையில், இணைய அழைப்பு மற்றும் செய்தியிடல் பயன்பாடுகள் அதே அளவிலான உரிமக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும், சேவை தரம் போன்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டும் என்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.. 2008 ஆம் ஆண்டில், இணைய சேவை வழங்குநர்கள், சாதாரண தொலைபேசி நெட்வொர்க்குகளில் அழைப்புகள் உட்பட இணைய தொலைபேசியை வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Project Engineers – I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E.., B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு […]

தேசிய உலோகவியலாளர் விருது திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, தேசிய உலோகவியலாளர் விருது 2022–ஐ வழங்க எஃகு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 11.10.2022. விண்ணப்பங்களை https://awards.steel.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் . இரும்பு மற்றும் எஃகு துறையில் உற்பத்தி, ஆராய்ச்சி, வடிவமைப்பு, கல்வி, கழிவு மேலாண்மை, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு செய்த உலோகவியலாளர்களை […]

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.. கோவை சுகுணாபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 3 வது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.. தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோவை, சென்னை, திருச்சி என 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது இதே போல் […]

இந்திய தேசிய கட்டட விதிமுறைகள் 2016-ஐ பயன்படுத்துவதற்கான வழிகாட்டி மற்றும் மின்சாதனப் பொருட்களை பொருத்துவதில் உள்ள பாதுகாப்புக் குறித்த கையேட்டை தகோயல் வெளியிட்டார். இந்திய தரநிர்ணய அமைப்பின் 4-வது நிர்வாக குழுக் கூட்டத்தின் போது இந்திய தேசிய கட்டட விதிமுறைகள் 2016-ஐ பயன்படுத்துவதற்கான வழிகாட்டி மற்றும் மின்சாதனப் பொருட்களை பொருத்துவதில் உள்ள பாதுகாப்புக் குறித்த கையேட்டை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வெளியிட்டார். இந்த […]

இந்தியாவில் மாரடைப்பு இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சரிவிகித உணவு, உடற்பயிற்சி என ஆரோக்கியமானவர்களுக்கும் கூட மாரடைப்பு வரலாம். தமனிகளில் கொழுப்பு படிவதால் மாரடைப்பு ஏற்படுகிறது, இது இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இந்தியாவில் இருதய நோயால் (CVD) இறப்பு விகிதம் 100,000 க்கு 272 ஆகும், இது உலகளாவிய சராசரியான 235 ஐ விட மிக அதிகம் என்று சமீபத்திய ஆய்வின் தரவு காட்டுகிறது. எனவே இதய செயலிழப்புக்கான […]

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உயரமான மலைகள், பசுமையான இடங்கள் மற்றும் கோவில்களைப் பார்க்க, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஆனால், கோவில்கள், மலைகள் மற்றும் பசுமையால் அலங்கரிக்கப்பட்ட உத்தரகாண்டில் பயங்கரமான இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இது போன்ற பல மர்மமான சம்பவங்கள் இங்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இங்கு பல பயமுறுத்தும் இடங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று சம்பாவாத் மாவட்டத்தின் லோகஹாட்டில் அமைந்துள்ள முக்தி கோத்தாரி […]

தருமபுரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், மானிய விலையில் பாரம்பரிய நெல்விதைகளை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்று பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி தனது செய்தி குறிப்பில்; வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை மூலம்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ பாரம்பரிய நெல்‌ விதைகள்‌ 2 மெட்ரிக்‌ டன்‌ 50 சதவீத மானியத்தில்‌ வழங்க அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில்‌ இருப்பில்‌ வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்‌ பாரம்பரிய […]

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 கோயில்களில் கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தி அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் இதர சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வருகிறது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அதன் படி, முதற்கட்டமாக பழநி முருகன் கோயிலில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது மாநிலம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 கோயில்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு […]