பெங்களூரில் உள்ள கான்ஃபிடன்ட் அலுவலகத்தில் (Confident group) வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், அந்நிறுவனத்தின் தலைவர் சி.ஜே. ராய் வெள்ளிக்கிழமை அன்று தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மருத்துவ உதவி அளிக்கப்பட்டபோதிலும், ராய் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்ற நிகழ்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் தடயவியல் குழுவினர் தற்போது அலுவலகத்திற்குள் உள்ளனர். கடந்த டிசம்பர் மாதமும் கான்ஃபிடன்ட் குழும அலுவலகங்களில் சோதனைகள் […]
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தை ‘மிகவும் துயரமானது’ மற்றும் ‘வருத்தமளிப்பது’ என்று குறிப்பிட்ட அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். பிரதமர் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் […]
அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாக மாதவிடாய் சுகாதாரத்திற்கான உரிமையும் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மக்கும் தன்மை கொண்ட மாதவிடாய் பேட்களை இலவசமாக வழங்கப்படுவதை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் பெண் மற்றும் ஆண் மாணவர்களுக்குத் தனித்தனி கழிப்பறைகள் இருப்பதை […]
சமீபகாலமாக, சமூக ஊடகங்களில் சில வீடியோக்கள் வேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக அரசு திட்டங்கள் பற்றிய தவறான தகவல்களை பரவும் பல்வேறு போலி வீடியோக்கள் வைரலாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் ஒரு வீடியோ பரவி வருகிறது.. அந்தக் வீடியோவில், நிர்மலா சீதாராமன் ஒரு முதலீட்டுத் திட்டத்தை விளம்பரப்படுத்துவது போல் காணப்படுகிறார். நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு ரூ. 25 லட்சம் […]
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.. இந்த புகார் தொடர்பாக இன்று தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் திருச்சி செய்தியாளர் கதிரவன் இன்று செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.. அப்போது கதிரவனை சுற்றி வளைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.. சம்பவ இடத்தில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் நிருபர் உள்ளிட்ட 4 பேர் மீது […]
ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் சின்னமாக பார்க்கப்படுகிறார். சனி பகவான் 2026 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி மாலை 7:30 மணிக்கு மீன ராசியில் அஸ்தமனமாகப் போகிறார். அதன் பிறகு, அவர் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே ராசியில் மீண்டும் உதயமாகப் போகிறார். இந்த சனிப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு பல நல்ல வாய்ப்புகளைக் கொண்டு வரும். நல்ல வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் […]
நவீன தொழில்நுட்பம் இசையை வேகமாகவும் எளிதாகவும் அணுகக்கூடியதாக மாற்றியிருந்தாலும், கருவிகளைக் கொண்டு மட்டுமே உருவாக்கப்படும் இசை காதுகளை மட்டுமே சென்றடைகிறது. ஆழ்ந்த உணர்வுகளிலிருந்து பிறக்கும் இசைதான் உண்மையாகவே இதயத்தைத் தொடுகிறது என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.. 11வது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவின் (AIFF) பிரம்மாண்ட தொடக்க விழாவில் கலந்துகொண்ட போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.. உலகம் முழுவதும் பாராட்டப்பட்ட திரைப்படங்களைக் கொண்டாடும் வருடாந்திர விழாவான அஜந்தா-எல்லோரா […]
நடுத்தர வர்க்க மக்கள் தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் சேமிப்புத் திட்டங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இவை முதலீடுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், உத்தரவாதங்களையும் நல்ல வருமானத்தையும் வழங்குகின்றன. தபால் அலுவலகம் வழங்கும் திட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்று அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) ஆகும். ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் விரும்புபவர்களுக்கு இதுவே சிறந்த வழி. ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு இது ஒரு சிறந்த வருமான […]
வாழ்க்கை, மரணம், மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது, ஆன்மா என்றால் என்ன—இந்த அனைத்தையும் யாரும் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.. ஆனால் ஒன்று மட்டும் உறுதி: இத்தகைய விஷயங்களில் முழுமையாக நல்லதும் இல்லை.. அல்லது முழுமையாக கெட்டதும் இல்லை.. ஏதோ ஒரு சிறிய இடைவெளி இருக்க தான் செய்கிறது.. இந்த மர்மமான இடைவெளியில் தான் ஆன்மா மறுபிறவி என்ற கருத்தும் இடம் பெறுகிறது. அத்தகைய மர்மமான சம்பவங்களில் ஒன்றாக கருதப்படுவது […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

