fbpx

விற்பனையை அதிகரிக்க மாத்திரை தயாரிப்பு நிறுவனம் மருத்துவர்களுக்கும், விற்பனை முகவர்களுக்கும் ரூ.1,000 கோடிக்கு பரிசு பொருட்கள் வழங்கியது அம்பலமாகியுள்ளது. நாட்டில் மொத்தம் 9 மாநிலங்களில் 36 இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் ரூ1.2 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ1.4 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். Dolo 650 மாத்திரைகளை, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலும் பரிந்துரை இல்லாமலும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர். இந்த […]

சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள், ஒரு ஒரு படம் நடித்தாலும் நல்ல கதையாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று நினைத்து கதைகளை தேர்வு செய்வார்கள். அப்படி தேர்ந்தெடுக்கும் கதைகளில் வெளியாகும் படங்கள் சில அமோகமாக ஓடி வசூலை குவிக்கும். சில படங்கள் அட்டர் ப்ளாப் ஆகும். அப்படி சில இயக்குனர்கள் சில நடிகர்களிடம் கூறும் கதைகளை அவர்கள் நிராகரிக்கும் பட்சத்தில், அந்த கதையில் வேறொரு நடிகர் நடித்து வெளிவந்து, படம் பிரம்மாண்ட […]

பள்ளிகளில் மாணவர்கள் கம்மல், செயின், காப்பு, கைகளில் கயிறு போன்றவற்றை அணிய தடை விதித்து சமூக பாதுகாப்பு நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கல்வித்துறை சார்ந்த சுற்றறிக்கைகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அந்த வகையில், சமூக பாதுகாப்புத்துறை மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், வேறு சில மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஆயுதங்களுடன் ஓபிஎஸ் தரப்பினர் நுழைந்ததை போலீசார் தடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதாடிய எடப்பாடி […]

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபுதேவா. எப்பொழுதும் பிரபுதேவாவின் படங்களில் குழந்தைகளை கவர்ந்திழுக்கும் சிறப்பம்சமும் இருக்கும். தற்போது பிரபுதேவா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மை டியர் பூதம். இந்த படம் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ரம்யா நம்பீசன், அஸ்வந்த், சம்யுக்தா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மஞ்சப்பை, கடம்பன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராகவன் இயக்கி இருக்கிறார். டி. […]

கள்ளக்காதல் பிரச்சனையால் பெண்ணை கழுத்தறுத்து கொன்றுவிட்டு வாலிபர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவெறும்பூரில் அரங்கேறியிருக்கிறது. திருச்சி மாவட்டம், மேலகல்கண்டார் கோட்டை, பழைய அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் வினோத்குமார் (36) தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு முதல் திருமணமாகி விவாகரத்தான நிலையில், 2-வது திருமணம் செய்துகொண்டு அதுவும் தற்போது விவாகரத்து நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், […]

இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சல்மான் கான் கேட்ட சம்பளத் தொகையால் டிவி நிர்வாகமே ஆடிப்போயிருக்கிறது. நடிகர் சல்மான் கான் கடந்த 13 ஆண்டுகளாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த சீசனை தொகுத்து வழங்க சல்மான் கான் கேட்கும் கட்டணம் டிவி நிர்வாகத்தையே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. ஏற்கனவே கொடுத்த தொகையைவிட கூடுதலாக […]

இரவின் நிழல் படத்தில் வரும் நிர்வாணக் காட்சியில் எப்படி நடித்தேன் என்கிற அனுபவத்தை நடிகை பிரிகிடா ஓபனாக பேசியுள்ள பேட்டி டிரெண்டாகி வருகிறது. ஆஹா கல்யாணம் வெப்சீரிஸில் ‘பவி டீச்சர்’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் நடிகை பிரிகிடா. இவர் தற்போது, நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான ’இரவின் நிழல்’ படத்தில் மெயின் லீடாக நடித்துள்ளார். சில இன்டிமேட் […]

விஜயாப்புரா அருகே கோல்லாரா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சோம்நாத் (26). இவர் விஜயாப்புரா டவுனில் உள்ள கார் மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அந்த மெக்கானிக் ஷாப்பிற்கு சப்-இன்ஸ்பெக்டரான சோமேஸ் கெஜ்ஜி என்பவர் அவர் காரை சரி செய்ய அந்த மெக்கானிக் ஷெட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் காரில் இருந்த ரூ.1 லட்சம் ரூபாய் கானாமல் போனதாக தெரிகிறது. என்வே அந்த பணத்தை சோம்நாத் எடுத்துவிட்டதாக […]

அதிமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமிக்கு குவாரி ஒதுக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ”முதல்வர் முக.ஸ்டாலின் வீட்டிலிருப்பதைவிட மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது சிறந்ததாக இருக்கும் என்பதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டார் என்றும் தெரிவித்தார். மேலும், அவர் விரைவில் பூரண நலம்பெறுவார் என்றும் துரைமுருகன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய […]