வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் […]
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றி கோரி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வழக்குகள் தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்ற பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதியன்று, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். […]
கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து 4 ஆண்ட்ராய்டு செயலிகளை தடை செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட செயலிகள் பயனர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தன, அவை மொத்தம் 100,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த செயலிகள் ஆபத்தான தீம்பொருளைக் கொண்டுள்ளதால், பயனருக்குத் தெரியாமலேயே விலையுயர்ந்த சந்தாக்களுக்குப் பதிவுசெய்து அவர்களின் பணத்தைத் திருடலாம். எனவே பயனர்கள் உடனடியாக இந்த செயலிகளை நீக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த 4 பயன்பாடுகளிலும் தீம்பொருள் இருப்பதை முதலில் […]
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற படகு போட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செம்பங்குளம் பம்பா நதியில் துவங்கியது. கேரள மாநிலம் ஆலப்புழாவில், செம்பங்குளம் படகு பந்தயம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பம்பா நதியில் மீண்டும் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த கேரளாவின் புகழ் பெற்ற நேரு கோப்பைக்கான படகு போட்டியை ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.இந்த படகு போட்டியில் 9 படகுகள் பங்கேற்கின்றன. […]
உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தியிடல் தளங்களில் WhatsApp ஒன்றாகும். எனினும் வாட்ஸ் அப் செயலியிலும் பல்வேறு சைபர் குற்றங்கள் அரங்கேறி வருகின்றனர்.. எனவே சைபர் தாக்குதல்களில் இருந்து பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, வாட்ஸ் ஆப் தொடர்ந்து சமீபத்திய பாதுகாப்பு இணைப்புகளுடன் புதுப்பிப்புகளை வெளியிடுகிறது. அசல் வாட்ஸ்அப் பயன்பாட்டில் இல்லாத சில கூடுதல் அம்சங்களைப் பெற, பல பயனர்கள் ‘WhatsApp+’ மற்றும் ‘Hey WhatsApp’ போன்ற மெசேஜிங் தளத்தின் மாற்றியமைக்கப்பட்ட […]
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகியது. இதில், மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. […]
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. 2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 மற்றும் 12 […]
ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் திடீர் மழைக்கு ஏற்ப நீர்வரத்து அதிகரிக்கும் என்றாலும், ஜூலை மாதத்தில் தான் நீர்வரத்து அதிக அளவை எட்டும். அப்போது, நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடியை எட்டும்போது ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர கிராமங்களில் […]
மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் புக் செய்தவுடன், இருக்கும் இடத்திற்கே சென்று கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சப்ளை செய்து வருவதாக மதுரை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மதுரை மாநகரம் முழுவதும் காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது, தல்லாகுளம் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,280-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து […]