fbpx

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண்‌ சான்று வழங்கப்படும்‌ பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெறும் முறை கைவிடப்பட்டு, ஆன்லைனில்‌ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள்ப்பட்டுள்ளது. எனவே பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற […]

கனமழை தொடர்வதால் இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர் போன்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.. இந்த நிலையில் தமிழகத்தில் பரவலாக வரும் 16-ம் தேதி வரை மிதமான மழை தொடரும் என்று வானிலை மையம் […]

வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் […]

காவல் துறை சம்மந்தமான அலுவலகத்தில் மின்சாதனப் பொருட்கள் பயன்பாடு தேவைப்படாதபோது அனைத்து வைக்க வேண்டும். இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவலர்கள் மற்றும் காவல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கையில்; நுகர்வோர் அமைப்பு ஆய்வில் சுமார் 70 சதவீதம் பேர் தங்களுடைய வீட்டு உபயோக பொருட்களை முழுமையாக அணைத்து வைக்காமல், மின்சார இணைப்பு தொடர்ச்சியாக வரும் வகையில் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், பயன்படுத்தாத மின்சாரத்திற்கும் சேர்த்து […]

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூலை 24 வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மணிப்பூர் அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து, நேர்மறை விகிதம் மாநிலத்தில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதால், மாநிலத்தின் அனைத்து பள்ளிகளும் (அரசு/தனியார்) ஜூலை 24 வரை மூடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக […]

வரும் 16-ம் தேதி வரை சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் […]

மாங்கனி திருவிழாவை ஒட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சிவபெருமானே அம்மையே என்றழைத்த, காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எளிமையான […]

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் மற்றும் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள நேற்று முதல் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இருந்து தங்களது நுழைவுச் சீட்டை சிரமமின்றி பதிவிறக்கம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தாண்டு நீட் நுழைவுத்தேர்வு நடைபெறகிறது. இதற்கான தேர்வு வரும் […]

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 16 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசு பல்டெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு கம்ப்யூட்டர் […]

பொதுக்குழுக்‌ கூட்டத்தை முன்னிட்டு சென்னை வந்து, கார்‌ மூலம்‌ ஊர்‌ திரும்பும்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில்‌ பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திருவள்ளூர்‌ மாவட்டம்‌, வானகரம்‌, ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ்‌ மண்டபத்தில்‌ 11.07.2022 அன்று நடைபெற்ற கழகப்‌ பொதுக்குழுக்‌ கூட்டத்தை முன்னிட்டு சென்னை வந்து, கார்‌ மூலம்‌ ஊர்‌ திரும்பும்போது […]