fbpx

கோவை சவுரிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் 25 வயது இளம்பெண். இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் ஹார்டுவேர் கடை வைத்துள்ளார். கனவருடன் கடையை நானும் சேர்ந்து பார்த்துக் கொள்கிறேன். எங்களது கடைக்கு போத்தனூரை சேர்ந்த சென்னை மற்றும் கோவையில் கட்டுமான […]

இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக மாற முடியாது என்று இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார். காளி என்ற ஆவணப்படத்தை பிரபல இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கி உள்ளார்.. அந்த படத்தின் போஸ்டரில் கையில் எல்ஜிபிடி கொடி, சிகரெட் உடன் காளி கெட் அப்பில் பெண் ஒருவர் இடம்பெற்றது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது… இந்து கடவுளை அவமதிக்கும் வகையிக் இருப்பதாக கூறி பாஜகவினர் இந்த போஸ்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. […]

தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை குற்றாலத்தில் தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. […]

உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 12ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]

கடலூர் வண்ணார்பாளையத்தை சேர்ந்த 47 வயதான அரசு ஊழியர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் பின்பக்க கதவை மூடாமல் வரண்டாவில் படுத்து தூங்கியுள்ளார். மேலும் அவரது மூத்த மகன் வீட்டில் உள்ள ஒரு ரூமிலும் அவரது இரண்டாவது மகள் கல்லூரி மாணவி, வராண்டாவிலும் தூங்கி உள்ளனர். இந்நிலையில் நடு இரவில், அந்த வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே வந்த 15 வயது சிறுவன் ஒருவன், அந்த […]

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் சேர்ந்த அஜய் பார்டேகி (25).  இவர் வெல்டிங் டெக்னிசியன் ஆக பணிபுரிந்து வந்தார். மத்திய பிரதேசத்திலுள்ள சிந்த்வாடாவைச்  சேர்ந்த செவிலியரான (23) வயது பெண்ணுடன் பேஸ்புக் மூலமாக பழகி வந்தார் பிறகு இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் அஜய் பார்டேகியும் பெண்ணின் தாயாரை சந்தித்துஅவரது மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக […]

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக சொந்த கட்சியினரே போர்க்கொடி தூக்கி உள்ளதால் ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. . பிரிட்டன் ஆளுங்கட்சி எம்.பி கிறிஸ் பிஞ்சர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவரை கடந்த பிப்ரவரி மாதம் அரசின் துணை கொறடாவாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்தார்.. அப்போதே போரிஸ் ஜான்சன் மீது பல விமர்சனங்கள் எழுந்தன.. இந்த நிலையில் கடந்த வாரம், கிறிஸ் […]

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது… சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக […]

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான் ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.. மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் தனக்கு பிசிஓஎஸ் என்ற கருப்பை தொடர்பான பிரச்சனை இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.. தனக்கு இருக்கும் பிரச்சனை குறித்து ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக பேசியதால் பலரும் அவரை பாராட்டி வரும் அதே நேரத்தில், ஸ்ருதியின் உடல்நிலை குறித்து பல […]

சென்னையில் கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் […]